செவ்வாய், 13 அக்டோபர், 2015

எதை தேடவேண்டும் !

எதை தேடவேண்டும் !

எது வசதியானதோ அதைசெய்யாதீர்கள்.  அதை தேடாதீர்கள்

எது சரியானதோ அதைசெய்யுங்கள்.அதை தேடுங்கள்

உண்மை எங்கோ மறைந்து இருக்கின்றது.அதை தேடுங்கள் அவை நிச்சயம் கிடைக்கும்.

உண்மையை  வெளியே தேடாதீர்கள் அவை கிடைக்காது

உள்ளே தேடுங்கள் உண்மை நிச்சயம் கிடைக்கும்.

உன்னுள் இருந்து உன்னை இயக்கும் ''உள் ஒளி உன் சிர நடுவில்'' உள்ளது .

அதை தொடர்பு கொள்ளுங்கள் அதை தேடுங்கள் வாழ்க்கையின் அனைத்து ரகசியங்களும் உள்ளே குவிந்து கிடைக்கின்றன.

அந்த சிர நடுவில்தான் அறிவு என்னும் சுடர் இயங்கிக் கொண்டு உள்ளது.

அறிவைக் கொண்டு அறிவைத் தேடுங்கள் .அருள் என்பதுத் தெரியும்.

மேலும் அருளைக் கொண்டு அருளைத் தேடுங்கள் .இறைவனின் அருள் நடனம் என்னவென்று தெரியும்.

அருள் நடனம் தெரிந்தால் என்றும் அழியாமல் மரணத்தை வென்று வாழலாம் .

தட்டாதீர்கள் கிடைக்காது.தேடுங்கள் கிடைக்கும்.

கருணையும்,அன்பும்,தயவும் கொண்டு தேடுங்கள் .நிச்சயம் இறைவன் அருள் கிடைக்கும்.

வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு