சனி, 25 ஜூலை, 2015

ஒரு தெய்வ வழிபாடு !

ஒரு தெய்வ வழிபாடு !

கொலை செய்து புலால் உண்பவர்கள் கூ ட,ஒரு தெய்வ  வழிபாட்டில் உறுதியாக இருக்கின்றார்கள் .

இஸ்லாம் மதம்,கிருத்தவ மதத்தை சார்ந்தவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தெய்வ வழிபாட்டிலும் ஒற்றுமையிலும் உறுதியாக இருக்கின்றார்கள் .

நம்முடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ,சாதிக்கு ஒரு கடவுள்,சமயத்திற்கு பல கடவுள்கள்,மதத்திற்கு பல கடவுள்கள் என்று அலைந்து திரிகின்றார்கள்.

அதனால் தான் கண்மூடி பழக்கம் எல்லாம் மண் மூடிப்போக என்கின்றார் !.

வாய்பேசாத ,உயிர் இல்லாத பொம்மைக் கடவுள்களான தத்துவ உருவங்களை வைத்துக் கொண்டும் .போக்கு வரத்திற்கு இடையூறாக,தெருத்தெருவாக கோயில்களைக் கட்டிக் கொண்டு அலைந்து திரிந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

கடவுள்  கொள்கையில் ஒற்றுமை இல்லாத இந்த இந்துமத மனிதர்களின் செயல்களைப் பார்த்து வள்ளல்பெருமான் மிகவும் வேதனை அடைகின்றார்.

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பல பல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடுவாரும்
பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று மேலே கண்ட பாடலின் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

பல கடவுள்கள் உண்டு என்று நினைத்து வணங்க்கு கின்றவர்களுக்கும் .வழிபடு வோர்களுக்கும்  அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை .

ஆதலால் எனக்குத் தெரிவித்த உண்மையை அவர்களுக்கும் தெரிவித்து உண்மை அறிவை விளக்க வேண்டும் என்று இறைவனிடம் மக்களுக்காக வேண்டி விண்ணப்பம் செய்கின்றார்.

எவ்வளவு படித்த மேதைகளாக இருந்தாலும் கடவுள் கொள்கையில் ஜீரோ வாக இருக்கின்றார்கள் அவர்கள் படித்து என்ன பிரயோசனம் .

ஒரு உடம்பிற்குள் இரண்டு மூன்று உயிர் இருக்குமா ? அதுபோல் கடவுள் பல பல உருவங்களில் பல பல தெய்வங்கள் இருக்குமா ? என்பதை சிந்தித்து பாருங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு