புதன், 22 ஜூலை, 2015

உண்மையான ஞானி ! .அருளாளர் என்பவர் யார் ?

உண்மையான ஞானி ! .அருளாளர் என்பவர் யார் ?

நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,கொலை துன்பம் ,மரணம்,எதுவும் வராதவர் எவரோ அவரே உண்மையான ஞானி ,உண்மையான அருளாளர் .என்பவராகும்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து வள்ளலாருக்கு,முன்னாடியோ,பின்னாடியோ வள்ளல்பெருமானைத் தவிர வேறு எவரும் அப்படி வாழ்ந்தது இல்லை.

முடி நரைக்காமல்,..வயது முதிர்ச்சி அடையாமல்,நோய் வராமல்,பயம் இல்லாமல்,யாராலும் கொலை செய்ய முடியாமல்,எக்காலத்தும் துன்பம் வராமல்,உணவு உட்கொள்ளாமல் ,வாழ்ந்தவர்தான் வள்ளலார்

மேலும் இந்த உடம்பை,ஐந்து பூதங்களான.மண்,தண்ணீர் .அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற எந்தக் கருவியாலும் அழிக்க முடியாத ,அருள் என்னும் ஒளித் தேகத்தைப் பெற்று ,மரணம் இல்லாமல் .மரணம் வராமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் வள்ளலார் .

செயற்கை யாலோ,இயற்கையாலோ ,எக்காரணத்தைக் கொண்டும் எந்த தீய செயல்களாலும் அழிக்க முடியாத அருள் தேகம் பெற்றவர்தான் .நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த வள்ளல்பெருமானாகும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதவர்கள் எப்படி சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்..சிந்திக்க வேண்டும்.

ஆதலால் அவர் சொல்லியது,எழுதி வைத்துள்ளது ,அவர் வாழ்ந்து காட்டி உள்ளது அனைத்தும் உண்மையானது.

ஆதலால்தான் அந்த உண்மையான அருளாளர் வாழ்ந்து காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறேன்.வேறு எந்த காரண காரியமும் இல்லை.

அவர் காட்டிய சாதி,சமய,மதம் அற்ற பொதுவான பாதை ஒன்றுதான் உலக மக்களை நல்வழிப் படுத்தும்

வேறு எந்த பாதைகளும் உண்மையான பாதைகள் அல்ல .என்பதை மக்கள் நினைந்து,உணர்ந்து தெளிந்து வாழ்ந்தால் மனித குலம் மேம்படும்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு