ஞாயிறு, 19 ஜூலை, 2015

மெய்ப்பொருள் !

மெய்ப்பொருள் !

இந்த உலகம் உமக்கு சொந்தமானது அல்ல

நீ இங்கு வாழ்வதற்கு வந்துள்ளாய் !

நீ வாழ்வதற்காக கட்டிக் கொடுப்படடதுதான் உடம்பு !

உடம்பை எடுத்துக் கொண்டு  நீ செல்ல முடியாது !

இங்குள்ள பொருளை நீ உரிமை கொள்ள முடியாது !

உரிமை கொண்டாலும் தண்டனை உண்டு !

எடுத்து செல்ல நினைத்தாலும் தண்டனை உண்டு!

எந்த பொருள் களுக்கும் சிதைவு  உண்டாக்க கூடாது !

உனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்ய வேண்டும் !

வாழ்வதற்கு வந்தாய் வாழ்ந்துவிட்டு திரும்பச் செல்ல  வேண்டும் !

திரும்பி செல்லவில்லை என்றால்.வேறு, வேறு ,பிறப்பு கொடுத்துக் கொண்டே இருக்கு வேண்டியதுதான் !

 மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு !

நீ இங்கு எப்படி வந்தாயோ,அப்படித்ததான் திரும்பி செல்ல வேண்டும் !

இங்கு, சொர்க்கம் ,..நரகம்,..கைலாயம்,..வைகுண்டம்.. மோட்சம் என்பது எல்லாம் கிடையாது . .

தவறு செய்து விட்டு ,..யோகம் ,..தவம்,..தியானம்..., வழிபாடு செய்து ஏமாற்ற முடியாது !

தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு !

துன்பம் ..துயரம்,..அச்சம்,..பயம்,..மரணம் என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் !

பொருளைக் கொடுத்து ஏமாற்ற முடியாது !

இங்குள்ள பொருள் உன்னுடையது அல்ல !

பொருள் உள்ளவன் புத்திசாலியும் அல்ல !

பொருள் இல்லாதவன் ஏமாளியும் அல்ல !

நீ அனுபவிக்கும் பொருளால் துன்பம் வந்து கொண்டே தான் இருக்கும்.!

படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை !

படித்தவன் அறிவாளியும் அல்ல !

படிக்காதவன் முட்டாளும் அல்ல !

கண்டது எல்லாம் அநித்தியமானது !

கேட்டது எல்லாம் பழுது ஆனது !

கற்றது எல்லாம் பொய்யானது !

களித்தது எல்லாம் வீண் ஆனது !

உண்டது எல்லாம் மலம் ஆனது !

உட் கொண்டது எல்லாம் குறை ஆனது !

இதுவரையில் யாரும் உண்மை அறியவில்லை. !

மெய் நெறியைக் கடைபிடிக்க வேண்டும் !

மெய்ப் பொருளை நன்கு உணர வேண்டும் !

இறைவன் அருளைப் பெற வேண்டும் !

இறவாத வரம் பெற்று இன்பம் அடைதல் வேண்டும் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ......

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு