சனி, 18 ஜூலை, 2015

மனிதன் ?

மனிதன் ?

கடவுளை மனிதனால் படைக்க முடியுமா ? .

இப்போது உள்ள கடவுள்கள் எல்லாம் பொம்மைகள் .

பொம்மையை வணங்குபவர்கள் புத்தி உள்ளவரா ?அறிவு உள்ளவரா ?

பேசாத கடவுளை பேசும் மனிதன் படைக்க முடியுமா?

உயிர் உள்ள கடவுள் இருக்க உயிர் இல்லாத கடவுளை வணங்கலாமா ?

அறிவுள்ள மனிதர்கள் அறிவில்லாத பொம்மையை வணங்கலாமா ?

ஆதியிலே கடவுளை கற்பித்தவன் அறிவு விளக்கம் இல்லாதவன்

குருடன் பின்னால் குருடன் செல்வதுபோல் உள்ளது .

ஒளியான கடவுளை இருக்க உருவமாக படைக்கலாமா ?

உன்னை அறியாமல் உலகத்தை எப்படி அறிவாய் ?

கற்ற நூல்களும் பொய் கண்ட காட்சிகளும் பொய் !

உன்னை அறிந்தால் உலகத்தை அறிவாய் .

உள்ளே பார்த்தால் உண்மை புரியும் ,வெளியே பார்த்தால் உண்மை மறையும்.

ஒளியைப் பார்த்தால் இருள் மறையும் .இருளைப் பார்த்தால் ஒளி மறையும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு