வெள்ளி, 10 ஜூலை, 2015

சன்மார்க்க உருவத்தில் சில விஷமிகள் !

சன்மார்க்க உருவத்தில் சில விஷமிகள் !

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் ---வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்
கென் மார்க்கமும் ஒன்றாமே !

வள்ளலார் மக்களுக்கு போதித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை .திசை திருப்ப சில நபர்கள் வள்ளலார் கொள்கையில் இருப்பது போல் நடித்துக் கொண்டு மக்களை குழப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

சில சமய மத வாதிகளும் சன்மார்க்கத்தில் இருந்து கொண்டே சன்மார்க்க துரோகிகளாக இருக்கின்றார்கள்..

சில நபர்கள் சித்தர்கள் வழியைக் கடைபிடித்துக் கொண்டு .வள்ளலார் சொல்லிய கருத்தும் சித்தர்கள் சொல்லிய கருத்தும் ஒன்றுதான் என்று மக்களை திசைத் திருப்ப முயற்சி செய்கின்றார்கள்.சுத்த சன்மார்க்கத்திற்கு தீங்கு விளைவிக்கின்றார்கள்

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் யார் சொல்லுவதையும் கேட்காமல் வள்ளலார் சொல்லிய வள்ளலார் காட்டிய ,வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவில் உள்ள சுத்த சன்மார்க்க கருத்துக்களை மட்டும் படித்து அதில் உள்ள உண்மைக் கொளகைகளை கடைபிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சுத்த சன்மார்க்கத்தை யாராலும் அழிக்கவோ ,மாற்றவோ ,திசை திருப்பவோ முடியாது .

சுத்த சன்மார்க்கம் என்பது ;- சாதி,சமயம்,மதங்களைக் கடந்தது.

மக்களை நழ்வழிப் படுத்த,உலகை திருத்த வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை விட்டால் வேறு வழியே இல்லை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

என் என்றால் சுத்த சன்மார்க்கம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளலார் மூலமாக மக்களுக்கு போதிக்கப் பட்டதாகும்.

இருந்தாலும் சன்மார்க்கத்திற்கு வரும் அன்பர்கள் யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டும்.இதுவே என்னுடைய
அன்பான வேண்டுகோளாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு