செவ்வாய், 5 மே, 2020

கடவுள் நம்பிக்கை வேண்டும்!

*கடவுள் நம்பிக்கை வேண்டும்*.

*கடவுள் நம்பிக்கை வேண்டும்.மூடநம்பிக்கை கூடாது!*

கடவுளின் பெயரால் மூடநம்பிக்கை வைப்பது கண்மூடித்தனமானது. என்பதை வள்ளலார் பாடல் மூலம் அறியலாம்.

வள்ளலார் பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத் திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.!
என்பதை அறியாமல்.மதங்கள்.
சமயங்கள் சாத்திரங்கள் சொல்லும் பொய்யான கடவுள்களையும்.பொய்யான வழிபாட்டு முறைகளையும்.உண்மை என்று நம்பி  கடைபிடித்து மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள்.

எப்படி என்றால் ? குருடன் யானையைத் தொட்டு பார்த்து சொன்ன கதைபோல் உலகம் முழுவதும் தவறான கடவுள் கொள்கையை பின்பற்றி மாண்டு கொண்டு உள்ளார்கள்.

*உண்மையான கடவுளைத் தொடர்பு கொண்டு வாழ்ந்து இருந்தால் மனிதன் சாகாவரம் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்கள்.*

இக்காலத்தில் உலகிற்கு உண்மைக்கடவுளை வரவழைத்து அருளைப் பெற்று மரணத்தை வென்று.ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் நமது வள்ளல்பெருமான் ஆவார்கள்.

*வள்ளலார் அருள் வாய்மொழி* !

சன்மார்க்கப் பெரும்பதி வருகை .
பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 .4 . 1871 . வெளியிட்டது.
*சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்* .

*இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை* . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும் .

பலவகைப்பட்ட சமய பேதங்களும் , சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் .

*அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல்* ..

*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற* *பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள்* ,
*மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல* .

இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதியே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள்
அஞ்சவேண்டாம் .என வள்ளலார் பதிவு செய்து உள்ளார்.

எனவே வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்களும்.மற்றும் உலகியலில் உள்ள கிருத்துவம்.இஸ்லாம்.
பவுத்தம்.
இந்தியாவில் உள்ள சைவம்.வைணவம் போன்ற எல்லா ஆன்மீக சிந்தனையாளர்களும்.

 கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்ற உண்மை உணர்ந்து.சாதி.சமயம்.மதம் போன்ற பொய்யான ஆன்மீக சிந்தனையில் இருந்து விலகி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டால் பெறவேண்டிய ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்..

இப்போது உலகம் முழுவதும் துன்பப்படுவதற்கு காரணம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்.தெரிந்து கொள்ளாததும் தொடர்பு கொள்ளாததும் முக்கிய காரணமாகும்.

உண்மை உணர்ந்து நன்மை அடைவதற்கு ஒரே வழி வள்ளலார் சொல்லிய சமரச சுத்த  சன்மார்க்க சத்திய சங்க கடவுள் கொள்கையாகும்.

 உலக உயிர்களை எல்லாம் தன்உயிர்போல் நேசிககும் ஜீவகாருண்ய ஒழுக்கமும்.(பரோபகாரம்).
இறைவனை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் இரண்டும் ஆன்மலாபம் பெறுவதற்கு முக்கியமான அகம்.புறம் வழிபாட்டு முறைகளாகும்.

காலம் உள்ளபோதே பெறவேண்டியதை பெற்றுக்கொள்வதே.
உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களுக்கு கிடைத்தை ஆன்மீக உண்மை வழிபாடாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு