ஞாயிறு, 3 மே, 2020

திருக்குறள் பின்பற்றுபவர்கள்!

திருக்குறள் பின்பற்றுபவர்கள் !.

திருக்குறளை பின்பற்றுபவர்கள் நிறையபேர் படித்தவர்கள்.
பண்டிதர்கள் பேராசியர்கள்.மேடை பேச்சாளர்கள்.அரசியல்வாதிகள் என விபரம் அறிந்தவர்கள் அளவுகடந்த நபர்கள் உள்ளார்கள். அவர்கள் மக்கள் போற்றும்  பெரிய மனிதர்களாகவும் உள்ளார்கள்.

திருக்குறளை பின்பற்றும் தகுதி யார் யாருக்கு உண்டு என்பதை திருவள்ளுவரே சொல்கின்றார்.

உயிர்கொலை கொலை செய்யாமலும்.அதன் புலால் உண்ணாமலும் இருப்பவர்களுக்கு  மட்டுமே திருக்குறளைப் பின்பற்றும் தகுதி.பொருள் உணரந்து.பேசும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள் என்கிறார் .

திருக்குறளை படிப்பவர்கள் பேசுபவர்கள் விளக்கம் சொல்பவர்கள்.விளக்கவுரை எழுதுபவர்கள் அனைவரும் .தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உயிர்க்கொலை செய்பவர்களும்.அதன் புலாலை உண்பவர்களும்.எவ்வளவு பெரிய.பட்டம்.பதவி. புகழ்.வசதி வாய்ப்பு வாய்ந்தவர்களாக இருந்தாலும்.திருக்குறளை தொடும் தகுதி அற்றவர்கள் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

இதை நான் சொல்லவில்லை திருவள்ளுவரே  சொல்கிறார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிர்களும் தொழும்.!

தன் ஊன் பெருக்கறகுத்த் தான் பிறிதூன் உண்பானை எங்கனும் ஆளும் அருள் !

மேலும் கொல்லாமை புலால் உண்ணாமை என்னும் தலைப்பில் திருக்குறளில் இரண்டு அதிகாரங்கள் என 20 குறட்பாக்கள் எழுதி வைத்துள்ளார் திருவள்ளுவர்.

உலகில் தோன்றிய அருளாளர்களில் உண்மையை வெளிப்படையாக.மக்கள் நலன் கருதி சொல்லியும் வாழ்த்தும் காட்டியவர்கள்.இரண்டே அருளாளர்கள்.திருவள்ளுவர்.திருஅருட்பிரகாச வள்ளலார்.ஆவார்கள்.

திருஅருட்பாவை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் நிச்சயம் புலால் மறுத்தவர்களாகவே வாழ்ந்து வருபவர்கள்.

திருக்குறளைப் பின்பற்றுபவர்களில் சிலபேர் புலால் உண்பவர்கள் சிலபேர் உண்ணாதவர்களும் இருக்கிறார்கள்.

அந்த இரண்டு அருளாளர்கள் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் .உயிர்க்கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமலும். வாழ்ந்தால்.உடற்பிணி.உயிர்பிணி இல்லாமல் நாடும் நாட்டுமக்களும் பயன் பெறுவார்கள்.

உலகப் பொதுமறை .பொய்யாமொழி.தெய்வமொழி.மெய்மொழி.தேவர்மொழி எனப் போற்றும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அன்பர்கள் அனைவரும்

திருக்குறள்.திருஅருட்பா சொல்லியவாறு பின்பற்றி திருந்தி வாழ்த்தால் படித்தவர்கள் முதல் பாமரமக்கள் வரை திருந்தி வாழ்வதற்கு வசதியாக இருக்கும்.

உலகம் முழுவதும் ஒழுக்கம் நிறைந்த அமைதி பூங்காவாக மலரும்.

சிந்தியுங்கள் செயல்படுங்கள் வாழ்ந்து காட்டுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு