சனி, 12 ஜனவரி, 2019

மல உடம்பை அருள் உடம்பாய் மாற்ற வேண்டும்!


வள்ளலார் பாடல் !

மேலே கண்ட பாடலின் வாயிலாக அறிய வேண்டும்.

நம் உடம்பு பஞ்ச பூதங்கள் கலந்த மல உடம்பு.இந்த உடம்பை இயக்க உயிர் வேண்டும்.உடம்பையும் உயிரையும் இயங்க வைக்க ஆன்மா என்ற ஓளிவேண்டும்.

ஆன்மாவிற்குள் ஓளி உள்ளது.அந்ந ஒளிக்குள் ஓரு அருள் ஒளி உள்ளது.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன  ? 

ஆன்மாவைப் படைத்தது யார்..அதற்குள் அருள் என்னும் ஆற்றல் மிகுந்த சக்தி வாய்ந்த அருள் வல்லபத்தை கொடுத்தது யார்? என்ற உண்மை தெரிந்து கொள்ளவதற்காகவே மனித பிறப்பிற்கு உயர்ந்த அறிவு கொடுக்க ப்பட்டுள்ளது..

நாம் நம்மிடம் உள்ள உயர்ந்த அறிவைப் பயன்படுத்தாமல்.நம் முன்னோர்களின் அறிவையே பயன் படுத்தி க்கொணடு வாழ்ந்து வருகிறோம்.

அதனால் வருவதே அச்சம் பயம் துன்பம் மரணம் என்பது எல்லாம் தொடர்ந்து கொண்டே வருகின்றது.

நம் முன்னோர்கள் என்பவர்களும்.ஆன்மீகத்தை போதித்த அருளாளர்களும் நம்மைப் போன்ற மனித தேகம் எடுத்தவர்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நம் அறிவு மழுங்கியது ஏன் ? 

நாம் பிறக்கும் போது ஒன்றும் தெரியாமல் ..சாதி.சமயம்.மதம்.இனம் மொழி.நாடு.உலகம்.கடவுள்.போன்ற எதுவும் தெரியாமல் .எல்லாவற்றையும் மறைத்து வைத்து தான் நாம் எல்லோரையும் இறைவன் படைத்துள்ளார்..

நாம் மறுபடியும் அறிவு விளக்கம் இல்லாமல் பழைய குப்பைகளை ஆன்மாவில் நினைப்பில் கெள்கிறோம்.....

நாம் பிறந்ததும் தாய் தந்தை சொல்வதையும்.அவர்கள் கொடுக்கும் உணவையும் உட்கொண்டு வாழ்ந்து வருகிறோம்...அவர்கள் பின்பற்றும் எல்லாவற்றையும் பின்பற்றி வாழ்கிறோம்.

அவர்கள்  சேர்க்கும் பள்ளியில் படிக்கிறோம்.. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைப் படிக்கிறோம்...அதற்குமேல் பொருள் தேடும் கல்வியைத் தேர்வு செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுகிறோம்.உலகியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொள்கிறோம்...

உலக வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது துன்பத்தை போக்கிக் கொள்ள ஆன்மீகத்தை தேடி அலைகிறோம்.நமக்கு பிடித்த எதோ ஒரு கடவுளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். 

அதிலும் மனம் அமைதி பெறவில்லை என்றால் நமக்கு பிடித்த  எதோ ஒருவர் எழுதிய ஆன்மீகம் சார்ந்த புத்தகத்தை படித்து .அவர்கள் சொல்வதைப் பின்பற்றி.சரியை.கிரியை.யோகம்.ஞானம் தியானம் .தவம் .வழிபாடு போன்ற வற்றையும் பின்பற்றி வாழ்ந்து . இறுதியில் வயது முதிர்ந்த நிலையில் மரணம் வந்து மாண்டு போகின்றோம்...

உலகில் உள்ளோர் எல்லோரும் மரணம் அடைவதால்
மரணம் என்பது இயற்கையானது.ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்று நினைத்து எல்லோரும் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

மரணம் என்பது இயற்கை யானது அல்ல!..அவை செயற்கை யானது ! மரணம் என்பதுதான் மிகப் பெரும் பிணி என்கிறார் வள்ளலார் .மனிதன் தவறு செய்வதால் தான் மரணம் என்னும் பெரும் பிணி வருகிறது..தப்பாலே சகத்தவர் சாகவே துணிந்து விட்டார்கள்.

மரணம் பெரும் பிணி வாரா வகை மிகு கரணம் பெருந்திறல். காட்டிய மருந்தே ! 

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே ! 

என்பது வள்ளலார் வாக்கு

மரணத்தை தவிர்க்கும் அந்த மருந்தை எங்கே பெறுவது யாரிடம் பெறுவது என்பதுதான் நமக்கு உள்ள குழப்பம்....

இந்த உலகத்தில் யாரிடமும் பெறமுடியாது.எவராலும் கொடுக்க முடியாது.எந்ந கடவுளாளும் கொடுக்க முடியாது.... தியானம் யோகம் தவத்தாலும் பெறமுடியாது....

நம்மைப் படைத்த கடவுளால் மட்டுமே வழங்க முடியும்.

அந்த கடவுள் யார்.? 

வள்ளலார் வாழ்க்கையை ஊன்றி கவனித்தால் மட்டுமே சரியான வழி கிடைக்கும்.... 

வள்ளலார் சிறு வயது முதலே அம்மா.அப்பா.அண்ணன்.ஆசிரியர்.
ஆன்மீககுரு. போன்ற எவருடைய பேச்சையும் கேட்கவில்லை.எந்ந ஆன்மீக நூல்களையும் படிக்கவில்லை.பள்ளிக்கு சென்று உலகியல் படிப்பும் படிக்கவில்லை ...

உண்மையான இறைவனைத் தேடிக்கொண்டே இருந்தார்.இறைவனைத் தேடுவதற்குண்டான புற ஓழுக்கத்தையும்.அக ஓழுக்கத்தையும் அவரே கடைபிடித்தார்.

சிறுவயதிலே அவருக்கு உண்மையான இறைவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டார்...அந்ந இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடமே எல்லாக் கல்வியும் கற்றுக் கொண்டார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பல காரணங்களுக்காக சிறுவயதில் வெளிப்படுத்தாமல் ..தன்னுடைய 47.வயதுக்குமேல் உலக மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்..

வள்ளலாரை சிறுவயதிலே இறைவன் ஆட்கொண்டார் என்பதற்கு திருஅருட்பாவிலே ஏராளமான சான்றுகள் உள்ளன...

அதிலே சிலவற்றைப் பார்ப்போம்....


மேலும்...

ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து 

ஒதுமறை முதற்கலைகள் ஒதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித்

தீதுநெறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துக் திருவருட் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் 

போது மயங்கேல் மகனே என்று மயக்கம் எல்லாம் போக்கி எனக்கு உள்ளிருந்த புனித பயம் பொருளே ! 

என்றும் மேலும்....



மேலும் ...



மேலும் இப்படி பலநூறு  பாடல்கள் ஆதாரம். உள்ளது..

பாடல்கள் தவிர உரைநடை ப்பகுதியிலும் பதிவு செய்துள்ளார்....

சிறு பருவத்தில் தானே ஜாதி ஆசாரம்.ஆசிரம ஆச்சாரம்.என்னும் பொய் உலக ஆச்சாரத்தைப் பொய் என்று அறிவித்து.அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து.அப்பருவம் ஏறுந்தோறும்.எனது அறிவை விளக்கம் செய்து என்னை மேனிலையில் ஏற்றி நிலைக்க வைத்து அருளினீர்.....மேலும்

வாலிபப் பருவம் அடுக்குத் தருணத்தில் தானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலை யெடுக்க வொட்டாது அடக்குவித்து அருளினீர்.....

சிறுவயதிலேயே வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தெரியும் !

அவ் வாலிபப் பருவம் தோன்றுவதற்கு முன்னரே.எல்லா உயிர்களுக்கும் இன்பப் தருவதற்கு அகத்தும். புறத்தும் விளங்குகின்ற **அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே** உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர்..

மேலும் ...

வாலிபப் பருவம் தோன்றிய போதே.**சைவம்.வைணவம்.சமணம்.பவுத்தம் முதலாகப் பல பெயர் கெண்டுபலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்.அச்சமயங்களில் குறித்த சாதனங்களும்.

**தெய்வங்களும்**அதன்  கதிகளும் தத்துவ சித்திவிகற்பங்கள் என்றும்.அச்சமயங்களில் பலபட விரிந்த**வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.சாத்திரங்கள்.முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக்**கற்பனைக் கதைகள் என்றும்**

உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆச்சாரங்களைச்சிறிதும் அனுட்டியாமல்  தடை செய்வித்து அருளினீர்....என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

இதன் உண்மை என்ன ?

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே உண்மை..மற்ற உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பொய் என்ற உண்மையை .வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே...     தெரிவிக்கின்றார்..

நாம் இன்னும் எந்த உண்மையும் தெரியாமல் .தெரிந்து கொள்ளாமல்.மேலும் வள்ளலாரின்வாழ்க்கை முறைகள் தெரியாமலும்.ஓன்று கிடக்க ஒன்றைப் பிடித்துக் கொண்டும் உளரிக் கொண்டும் உள்ளோம்...

நம் உள் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத தொடர்பு கொண்டு ..வாழ்வதே சிறந்த வாழ்க்கை யாகும்...

வள்ளலார் எதையும் தன் விருப்பம் போல் சொல்லவில்லை...எழுதவும் இல்லை.அருள் பெற்று மரணம் வெல்வதற்கு என்ன என்ன வழிகள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக விளக்கியும்.அதன்படி வாழ்ந்தும் காட்டி உள்ளார்....

வள்ளலார் காட்டும் கல்விக்கு மட்டுமே சாகாக்கல்வி என்று பெயர்..சாகாக்கல்வி கற்க பொருள் தேவை இல்லை.. வள்ளலார் சொல்லும் ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் போதும்..

மருள் நெறியாகிய சமய மதம் நெறிகளைபின்பற்றி வாழ்வதால் தான் மரணம் வருகின்றன..அருள் நெறியாகிய சுத்த சன்மார்க்க நெறியை மட்டும் பின்பற்றி வாழ்ந்தால் மரணத்தை வென்று .அருட்பெருஞ்ஜோதியில் கலந்து பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் முழுவதும் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேய ரஷ் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு