திங்கள், 15 மே, 2017

தமிழ் நாட்டின் நிலை !

தமிழ் நாட்டின் நிலை !

தமிழ் நாட்டை மனிதர்கள் தான் ஆளுகின்றனரா வேறு ஏதாவது ஆளுகின்றதா என்பதே தெரியவில்லை.

தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும்,போராட்டம்,சாலை மறியல்,,ரயில் மறியல்,மதுக்கடை நிறுத்த போராட்டம், ,குடிக்க தண்ணீர் இல்லை, ,விவசாயம் செய்ய மழை இல்லை, சட்டப்படி தண்ணீர் கிடைக்க வழி இல்லை.என போராட்டத்திற்கு பஞ்சமே இல்லை .


அராசாங்க வேலை செய்யும் போக்கு வரத்து உழியர்களுக்கு 7000. கோடி ரூபாய் பாக்கி ,அவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது .அரசாங்கமே கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ,அவர்களும்,வேலை நிறுத்த போராட்டம் .அதனால் தமிழக மக்கள் படும் துன்பம் அளவில் அடங்காத துயரத்திற்கு ஆளாகி மக்கள் அலை மோது கின்றார்கள்..


மக்களின் பணத்தில் உல்லாச ஏசி பங்களாக்களிலும் உல்லாச ஏசி வாகனங்களிலும் பவனி வரும் ஆட்சி யாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் படும் துன்பத்தைப் போக்க வழித் தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்கள்..தமிழக கஜானா காலியாகி விட்டது .மக்களின் பணத்தை ஆட்சியாளர்களே கொள்ளை அடித்து விட்டார்கள்.

இவர்களை என்ன செய்வது என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மக்களே விழித்து எழுங்கள் நீங்கள் தான் இந்த நாட்டின் எஜமானர்கள்.பொருத்தது போதும் பொங்கி எழுங்கள் .நாட்டைக் காப்பாற்ற நல்லவர்களைத் தேர்வு செய்யுங்கள்..

அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு !

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து !...வள்ளலார் ...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு