வியாழன், 27 ஏப்ரல், 2017

கடவுள் ஒருவரே !

கடவுள் ஒருவரே !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல ஞானிகள் தோன்றி உள்ளார்கள்.

ஞானிகளால் பல மதங்கள் சமயங்கள் சாதிகள் தோன்றி உள்ளன.

மதங்கள் சமயங்கள் எல்லாம் கடவுளைப் பற்றியும் ,ஒழுக்கத்தைப் பற்றியும் மக்களுக்கு போதிக்கத் தான் தொடங்கின .ஆனால் ஒரேக் கருத்தையோ ,ஒரே கடவுளைப் பற்றியோ போதிக்க வில்லை.

அவரவர்களுக்குத் தெரிந்ததை ,அறிந்ததை,கடவுளாக வழிபட காட்டிக் கொடுத்தார்கள்.ஒவ்வொருவர் காட்டிய கடவுள்களும் வெவ்வேறு விதமான தோற்றங்களும்,உருவங்களும் உள்ளதாகவே இருந்தன.கடவுள்களின் வழிபாட்டால் பிரிவினைகள் உண்டாயிற்று .

மதங்களாலும்,சமயங்களாலும் ,சாதிகளாலும், ஒரே இனமான மனித இனம் தனித்தனியாக பிரிந்து விட்டன.மனித இனம் பிரிந்ததற்கு காரணம் கடவுள் கொள்கைதான் என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதற்குமேல் கடவுளைப் படைத்த குருமார்களையும்,போதகர்களையும் ,ஆன்மீக வழிக் காட்டியவர்கள் என்று அவர்களையே கடவுளாக பாவித்து வழிபட ஆரம்பித்து விட்டார்கள் .
கடவுளின் உண்மைத் தெரியாமல்,பொய்யான கடவுள்களை மக்கள் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால் அரசியல் கட்சிகள் போல் ஆன்மீகம் தனித்தனியாக பிரிந்து மக்களை திசை திருப்பி அழித்துக் கொண்டு உள்ளன.போரிட்டு அழிந்து கொண்டு உள்ளன.

வள்ளலார் சொல்லுகின்றார் !

நாம் நாமும் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம், இதிகாசம், முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் ?

அவைகளில் ஒன்றிலாவது கடவுளின் உண்மையை வெளிப்படக் காட்டி உள்ளதா ? தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் ,கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் ;-- கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு .இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால்,வாய்,மூக்கு,உடம்பு முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .இஃது உண்மையாக இருப்பதாகவே --முன்னும்,பின்னும்,உள்ள ஆன்மீக பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,உண்மைத் தெரியாமல் அப்படியே கண்ணை முடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள் என்கின்றார் வள்ளலார் .

கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள் என்றால் என்ன ? குருடர் யானையைக் கண்டு சொன்னதுபோல் என்கின்றார் .அதாவது உண்மையான கடவுளைக் காணாத குருடர்கள் என்கின்றார்.

அதற்கு மேல் இவற்றை எல்லாம் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் என்கின்றார் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கின்றார் .இவற்றை மறைத்தவன் வல்லவன் என்பதை சொல்லுகின்றார்

ஏன் என்றால் மக்கள் நம்பும்படி கற்பனைக் கதைகளை சிறப்பாக படைத்துள்ளான் என்கின்றார்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்வதுபோல் .கலைகளை வைத்து கற்பனையாக நிலைத்து இருப்பதுபோல் கதைகளை கட்டிவிட்டு இருக்கின்றார்கள்.

அவன் கற்பனையாக கதைகளை கட்டி விட்ட அந்த கற்பனைப் பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை,இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய உடைக்க ஒருவரும் வரவில்லை
( வள்ளலார் வந்து அந்த பூட்டை உடைத்து விட்டார்) அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள்.
ஞான சித்திகளை பெற வழிக் காட்டவில்லை.

அதற்காக ஒவ்வொரு சித்துக்கும்,பத்து வருடம்,எட்டு வருடம்,பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம் .அதற்காக லஷ்யம் வைத்தால் உண்மையான ஆண்டவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்ற லஷியம் போய் விடும் என்கின்றார் வள்ளலார் .

ஆதலால் ''சுத்த சன்மார்க்கிகள் ''சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும்,,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,முதலியவைகளிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார்..மேலும் சித்தாந்தம்,வேதாந்தம்,முதலிய மதங்களிலும்,லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார்...

கடவுள் ஒருவரே உள்ளார் என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்றும் ,அறிந்து உண்மை அன்பால்,உண்மை இரக்கத்தால் உண்மையான தயவால் ,உயிர் இரக்கமான ஜீவ காருண்யம் கொண்டு,உண்மையாக வழிபாடு செய்ய வேண்டும் என்கின்றார் .அப்படி செய்தால் பெற வேண்டிய அருளைப் பெற்றுக் கொண்டு மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம்..

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் !,
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் !

என்றும் தெளிவாக சொல்லி உள்ளார் ...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எய்வகை சார் மதங்களிலே பொய் வகை சாத்திரங்கள்

எடுத்து உரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்

கரிபிடித்துக் கலகம் இட்டப் பெரியரினும் பெரியீர்

ஐவகைப் பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர்

அழி உடம்பை அழியாமை யாக்கும் வகை அறியீர்

உய்வகை என் தனித் தந்தை வருகின்ற தருணம்

உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே !

என்னும் பாடல் வாயிலாக நமக்குத் தெரிவிக்கின்றார் வள்ளலார் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு