புதன், 24 மே, 2017

பிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும் !


பிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும் !

பல ஆண்டுகளாக நாம் செய்த தீய காரியங்கள் தீய வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி,தீராத துன்பம் விளைவிக்கின்றது .

அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஆன்ம லாபம் கிடைக்காமல் போய் விடுகின்றது.ஆன்ம லாபம் என்பது ! இறைவன் இடம் இருந்து நியாயமாகப்   பெற வேண்டிய அருள் என்பதாகும்.அந்த அருள் கிடைக்காமல் நரை ,திரை,பிணி,மூப்பு, பயம்,மரணம் போன்ற துன்பங்கள் வந்து , மாண்டு மறைந்து போகின்றோம்.

அந்த துன்பங்களில் இருந்து  விலக வேண்டுமானால் ,மற்ற ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கினால் மட்டுமே!  நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ள  துன்பங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.வேறு வகையால் துன்பங்கள் தீராது ! தீர்க்க முடியாது என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சாதி,சமய,மதங்களில் பற்று வைத்து ,துன்பங்களை தீர்ப்பதற்காக பலபல வழிப்பாட்டு முறைகளிலும் ஈடுபட்டு ,பலப்பலஆச்சார, சங்கற்ப,விகற்பங்களும்,அதற்குண்டான பரிகாரங்களும்,பிரார்த்தனைகளும்  செய்து கொண்டு வருகின்றோம்,அதனால் அற்ப வினைகள் தீருமேத் தவிர முழுமையான வினைகள் தீரவே தீராது .

ஆன்மாவில் பதிவாகி உள்ள வினைகள் என்னும் திரைகளை விளக்கிக் கொள்ள வேண்டுமானால் .பிறர் துன்பங்களைப் போக்கும் ஜீவ காருண்யமே வழி என்பதலால் அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .
அறிவு விளங்கிய  மனிதர்கள் !

அறிவு விளங்கிய ஜீவர்கள் எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடாக பின் பற்ற வேண்டும் என்றும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவ காருண்யமே போட்ச வீட்டின் திறவு கோல் என்றும்.ஜீவ காருண்யமே சுத்த சன்மார்க்கம் என்றும் ---சுத்த சன்மார்க்கமே அருளைப்  பெரும் வழியாகும் என்பதை வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்து உள்ளார் .
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.!

வள்ளலார் சொல்லியதோடு அல்லாமல் .எழுதி வைத்ததோடு அல்லாமல் வடலூரில் சத்திய  தருமச்சாலையை தோற்றி  வைத்து உள்ளார் .

உலகில் மக்கள் பட்டினி,பசி ,வறுமையில்  வாடிக் கொண்டு தங்கள்  உயிர்களை இழந்து மாண்டு  கொண்டு உள்ளார்கள் ,,அதுவும் தமிழ் நாட்டில் வள்ளலார் கண்முன்னே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டு இருந்தன .

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் . .

1867-5-23,24,25,ஆம் நாள் தமிழ் வருடம் பிரபவ வருடம் வைகாசி திங்கள்  11,ஆம் நாள் வியாழக்கிழமை அன்று  ..வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை''நிறுவினார் வள்ளலார் ..

அன்றே ஜீவ காருண்யத்தின் முக்கியத்தை ,அதன் விளக்கமான , ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் முதற் பிரிவாகிய நூலை வெளியிட்டார்.
அப்பகுதியை சிதம்பரம் வேங்கட சுப்பு தீஷிதர் அவர்களைக் கொண்டு வழிபாடு முதலியன செய்வித்து அதனை வாசிக்க செய்தார் .

சத்திய தருமச்சாலை ஸ்தாபித்த நாள் தொடங்கி மூன்று நாட்கள் வரை ஒவ்வொரு நாட்களிலும்,16,பதினாறு ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னம் அளிக்கப் பட்டது.அத்துடன் நிற்காமல் ,எப்பொழுதும் அந்த தருமச்சாலையை நோக்கிப் பசியோடு வருபவர்களுக்கு எவ்விதக் குறைவும் இலாது அன்னதானம் ,வள்ளலார் கட்டளைப்படி நடந்தேறி வருகின்றது .''எப்போதும் அடுப்பு அணையாமல் புகைந்து கொண்டே இருக்க வேண்டும் ''என்ற வள்ளல்பெருமான் வாக்கின்படி இன்று வரை அவ்வாறே நடந்து கொண்டு  வருவது அனைவரும் அறிந்ததே !

வருகின்ற 25-5-2017,ஆம் நாள் சத்திய  தருமச்சாலை தோற்றுவித்து 151,வது துவக்க விழா வடலூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது .அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம் ..அதுசமயம் மூன்று நாட்கள்,திருஅருட்பா இசைக் கச்சேரியும் நடைபெறுகின்றது.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பசியின் கொடுமை !

ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முக்கியமான பகுதியை வள்ளலார் தெரிவிப்பது !

கல்வி கேள்விகளால் பகுத்து அறியத்தக்க அறிவுடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிக்கை ;---

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

அந்தப் பிரயோஜனம் யாதோ? எனில் !

எல்லா அண்டங்களையும்.. ,எப்பாப் புவனங்களையும்,எல்லாப் பொருள்களையும்,...எல்லலாச் சீவர்களையும்,////எல்லாச் செயலகளையும், எல்லாப் பயன்களையும்,...தமது பரிபூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினாராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ..எக்காலத்தும் ----எவ்விடத்தும் ....எவ்விதத்தும் ----எவ்வளவும் ....தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும் ..

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையவேண்டும் ? எனில்.;---

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும் .என்று அறிய வேண்டும் ..

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக் கூடும் ? எனில் ;-

ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் கடவுள் அருளைப் பெற வேண்டுமே அல்லாது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது  என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவ காருண்யத்தின் முக்கிய லட்சியம் ஆவது எது ? எனில் ;---

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்விக்கின்றதே  முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்

பசியின் கொடுமை ;-- உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனுக்கும் ---உலகம் முழுவதும் ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் ---மூன்று ஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும்,பசி நேரிட்ட போது மனம் இளைத்தும் ----வலி குலைந்தும் ---அனுபவம் தடைப்பட்டும் ---வருந்துகின்றார்கள் என்றால் எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடு படுவார்கள் ..

என்பதை விளக்கி ..அதனுடன் பசி அதிகரித்த காலத்தில் மனித உடம்பில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை வள்ளலார் விளக்குகின்றார் .

முகம் புலர்ந்து போகின்றது !
உச்சி வெதும்புகின்றது !
பிரமரந்த்திரம் அடைபடுகின்றது !
காது கும்மென்று செவிடு படுகின்றது !
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது !
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது !
நாக்கு நீர் உலர்ந்து தடிப்பு ஏறுகின்றது !
மெய் முழுதும் கருகி சக்தி அற்று ஸ்மரணை கெடுகின்றது !
வாக்குக் குழறித் தொனி மாறுகின்றது !
கைகளும் கால்களும் தட தடத்துச் சோர்ந்து தடுமாறு கின்றது !
மல சல வழி வெதும்பி வேறுபடுகின்றது !
உரோமம் வெறிக்கின்றது !
பற்கள் கருகித் தளர்கின்றன !
இரத்தமும் சலமும் சுவறுகின்றது !
சுக்கிலம் தன்மை மாறி வரளுகின்றது !
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது !
நாடி நரம்புகள் வலி இழந்து மெலிந்து கட்டுவிக்கின்றது !
வயிறு பகீர் என்கின்றது !
மனம் தளர்ந்து நினைவு மாறுகின்றது !
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது !
சித்தம் கலங்கிப் திகைப்பு ஏறுகின்றது !
அகங்காரம் குலைந்து அச்சம் உண்டாகின்றது !
பிரகிருதி சுருங்குகின்றது !

கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது ---தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன ,

இவ்வளவு அவத்தைகளும் எக்காலத்திலும் உண்டாகின்றன ,இது எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றது .

ஆகாரம் உண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைத்தது ''கடவுள் விளக்கமும் ,ஆன்ம விளக்கமும்'' அகத்திலும் முகத்திலும்,வெளிப்பட்டு திருப்தி இன்பம் உண்டாகின்றது .

ஆகலில் இந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கடலூர் மாவட்டம் கூடலூர் தாலுக்காவைச் சார்ந்த ''வடலூர் என்கின்ற பார்வதி புரத்தில்'' ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' என்று ஒரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது .

அது பலர் சகாயத்தினாலேயே நிலை பெற வேண்டும் ஆதலால் ,ஜீவ தயவு உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடிய வரையில் பொருள் முதலிய உதவி செய்து ''அதனால் வரும் லாபத்தைப் பாகம் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை'';--

இங்கனம்
பிரபவ ஆண்டு வைகாசி திங்கள் 11.நாள்
சத்திய தருமச்சாலை
வடலூர் ....

மேலே கண்டபடி ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி சுருக்கமாக சத்திய தருமச்சாலை துவங்கிய அன்று மக்களுக்கு  வள்ளலார் தெரிவித்து உள்ளார் .மேலும் முழு விபரங்கள் அடங்கிய விளக்கத்தை  ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ளன படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தனன் !

இந்த ஒரு பாட்டுப் போதும் !

விரிக்கில் பெருகும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...
 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு