செவ்வாய், 16 மே, 2017

அரசியலுக்கு யார் வரவேண்டும் ?

அரசியலுக்கு யார் வரவேண்டும் ?

நல்ல படித்த அறிவும் திறமையும் உள்ள இளைஞர்கள் வரவேண்டும்.
அதுவும் நாட்டின் மீதும் மக்கள் மீதும் பற்றும் அக்கரையும் உள்ள சுயநலம் இல்லாத துடிபுள்ள இளஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
அவர்களால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் நல்ல ஆட்சி நடத்த முடியும்.

அதை விட்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சம்பாதித்து விட்டு வயது முதிர்ந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் அரசியலுக்கு வருகிறேன் என்று யார் சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடாது.

அவர்கள் நடிகராக இருந்தாலும் சரி..வியாபாரியாக இருந்தாலும்..அரசியல்வாதியாக இருந்தாலும் சரி.மக்களை ஏமாற்றுபவர்களே ஆவார்கள்..

இப்போது பொருளாதரம்.அரசியல்,சமூகம்,வேதியல் .அறிவியல்.விஞ்ஞானம் படித்துவிட்டு திறமை உள்ள இளஞர்கள் நிறையபேர் நமது நாட்டில் உள்ளார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே

சாதி.சமய.மதம் என்ற வேறுபாடு இல்லாத பொது நோக்கத்தோடு நல்லாட்சி நடத்த முடியும்..எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்ய முடியும்..

இதுவரை மக்களை அரசியல் வாதிகளும்.சினிமாகார்ர்களும்,நடிப்பாலும் ,பேச்சாலும் மக்களை ஏமாற்றி விட்டார்கள்.ஏமாந்து விட்டீர்கள்.இனிமேல் ஏமாந்து விடாதீர்கள் உஷாராக இருங்கள்.

வருங்காலம் நல்ல காலமாக அமைய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு