சனி, 1 ஏப்ரல், 2017

உண்மையான அரசியல் வாதி யார் ?

உண்மையான அரசியல் வாதி யார் ?
தேர்தலில் நிற்பவர்களுக்கு அவர்களுக்கு உண்டான சின்னத்தை அறிவித்துவிட்டு அவரவர்கள் சும்மா இருந்தால் போதும்.
தேர்தல் சின்னம் ,அதில் நிற்பவர் யார் ? என்பதை மட்டும் தேர்தல் கமிஷன் விளம்பரம் செய்தால் போதும்.
தேர்தல் பிரச்சாரமோ .ஆடம்பர போஸ்டர்களோ ,பொய்யான வாக்குறுதிகளோ ,அவசியமே இல்லை..
தெருத்தெருவாக ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை .பணம் கொடுத்து ஒட்டு கேட்கவேண்டிய அவசியம் இல்லை .பொய் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
தேர்தலில் நிற்பவர்களில் யார் ? நல்லவர் ஒழுக்கமானவர்.மக்களுக்கு நன்மை செய்பவர் என்பதை மக்கள் தீர்மானித்து ஓட்டுப் போடவேண்டும்.
அப்படி ஒரு சட்டத்தை தேர்தல் கமிஷன் செய்தால் அரசியல்வாதிகளின் ஊழல் குறைந்து நல்லவர்களை மக்கள் தேர்ந்து எடுக்க வசதியாக இருக்கும்.
காவல் துறை கண்காணிப்பு ,குறையும்.அரசாங்க செலவு குறையும், கள்ளப்பணம் விளையாடாது. .மக்களை ஏமாற்றும் நிலை உருவாகாது..மக்கள் அமைதியுடன் ஒட்டு அளித்து நல்லவர் யார் ? கேட்டவர் யார் ? என்பதை தெரிந்து தேர்வு செய்ய வசதியாக இருக்கும்...
அப்போதுதான் உண்மையான அரசியல் வாதி யார் /என்பது மக்களுத் தெரியும். நம் நாட்டிற்கு ஒளிமயமான பிரகாசம் தோன்றும்.
தேர்தல் கமிஷன் செய்வார்களா ? செய்தால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது ..மக்கள் அச்சம் ,பயம்,துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் .
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு !------வள்ளலார் .
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு