வியாழன், 23 மார்ச், 2017

நல்லவரா? கெட்டவரா ?எப்படி தெரிந்து கொள்வது ?

நல்லவரா? கெட்டவரா ?எப்படி தெரிந்து கொள்வது ?
ஒவ்வொரு மனிதர்களும் நல்லவரா .கெட்டவரா என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும் .?
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி நல்லவர்கள் போல் நடித்து வாழ்வார்கள்.மக்களையும் ஏமாற்றுவார்கள்,மக்களும் அவர்களை நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டு அவர்களை ஆதரிப்பார்கள். .ஆனால் அவர்கள் நல்லவர்களா ? கெட்டவர்களா ? என்று அறிந்து கொள்ளவே முடியாது.
ஆனால் இறைவன் பார்வையில் இருந்து அவர்கள் தப்பவே முடியாது.
மக்களின் ஆதரவு உள்ளதால் அவர்களை நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லோருக்கும் இறைவன் கொடுக்கும் தண்டனை இறுதியில் மரண தண்டனை ...
அந்த மரண தண்டனை எப்படி வருகின்றது என்பதை வைத்து அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று அறிந்து கொள்ளலாம்..
உடம்பை விட்டு உயிர் பிரிகின்ற போது,உடம்பிற்கு எந்த துன்பமும் இல்லாமல் .எந்த துன்பமும் கொடுக்காமல்,எந்த பிணியும் இல்லாமல், உயிர் உடம்பை விட்டு பிரிந்தால் அவர்கள் நல்லவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு மீண்டும் நல்லதொரு மனித பிறப்பு கிடைக்கும்.
கெட்டவர்களுக்கு மரணத்திற்கு பின்பு எந்த பிறப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாது.ஆனால் மனித பிறப்புக்கு கீழ் உள்ள பிறப்பு அவரவர்கள் தகுதிக்குத் தகுந்தவாறு கிடைக்கும். இதை அறிந்து உணர்ந்து மக்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
இதுதான் இறைவன் தீர்ப்பு !
இதைத்தான் வள்ளலார் சொல்லுகின்றார் !
ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்.
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமான
பேய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
என்று வள்ளலார் இறைவனிடம் கேட்கின்றார் ..இறுதியில் நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் என்பதை பதிவு செய்கின்றார் ..
அதேபோல் வாள்ளலார் வாழ்ந்தும் காட்டுகின்றார்.அதற்கு மேலும் .மரணத்தை வென்றும் வாழ்ந்து காட்டுகின்றார் .
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர்கள் வார்த்தைகளாகும்.
மேலே கண்ட பாடலில் உள்ளபடி,மனிதர்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வதுதான் மனித குலத்தின் உன்னதமான வாழ்க்கையாகும்.
நல்லவர்களுக்கு நோய் வராமல் வாழ்வதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கையாகும் .நோய் என்னும் பிணி வராமல் மரணம் அடைவதே நல்லவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ... .
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு