செவ்வாய், 14 மார்ச், 2017

வள்ளலார் சொல்லிய உளவு !

வள்ளலார் சொல்லிய உளவு !

இந்த உலகத்தில் பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

நமக்கு அறிவு வந்த காலம்  முதல் ''அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்'' ''அடைந்து அறியாத அற்புத அறிவுகளையும்'',...அடைந்து அறியாத குணங்களையும்,..கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,...செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,...கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,...அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,...பெற முடியாமல் வீணாக அழிந்து கொண்டு உள்ளோம்.

1,அறிந்து அறியாத அற்புத அறிவு,
2,அடைந்து அறியாத அற்புத அறிவு,
3,அடைந்து அறியாத அற்புத குணம்,
4,கேட்டு அறியாத அற்புத கேள்விகள்,
5,செய்து அறியாத அற்புத செயல்கள்,
6,கண்டு அறியாத அற்புதக் காட்சிகள்,
7,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்கள்,

மேலே கண்ட அனைத்தும் மனித தேகம் எடுத்த நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..ஆனால் அறிந்து  தெரிந்து கொண்டு உள்ளோமா ? என்றால் இல்லை என்பதுதான்,அனைவரிடமும்  பதிலாக வருகின்றது ..

மேலே கண்ட அனைத்தும் அறிந்து தெரிந்து கண்டு ,கேட்டு, பெற்று, அனுபவித்து நமக்குத் தெளிவாக விளக்கி விளக்கம் தருகின்றார் .நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள்....

வள்ளலார் இவைகளை எல்லாம்  எங்கு இருந்து பெற்றார் ? யார் இடம் இருந்து பெற்றார்? எவ்வாறு பெற்றார் ? என்னும் உண்மையைத்  தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் வள்ளலார் போல் மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழமுடியும் ./

அதை விடுத்து பழைய சமய மதக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டும்  .வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வதால் எந்தப்  பயனும்,எப்போதும் கிடைக்காது என்னும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

உண்மைக் கடவுள் யார் ?

நாம் இதுவரை சமய மதங்கள் காட்டிய  பொய்யானக் கடவுள்களை வணங்கியும்,வழிபட்டும் சிற்றறிவு பெற்று வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளோம்....நாம் முதலில் உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார் ..

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ....
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும்.
இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் ...
எல்லா அண்டங்களையும்,...
எல்லா உலகங்களையும்,...
எல்லாப் பதங்களையும்,....
எல்லாச் சத்திகளையும் ...
எல்லாச் சத்தர்களையும் ...
எல்லாக் கலைகளையும் ...
எல்லாப் பொருள்களையும் ...
எல்லாத் தத்துவங்களையும் ...
எல்லாத் தத்துவிகளையும் ...
எல்லா உயிர்களையும் ....
எல்லாச் செயல்களையும்...
எல்லா இச்சைகளையும் ...
எல்லா ஞானங்களையும் ...
எல்லாப் பயன்களையும் ....
எல்லா அனுபவங்களையும் ....
மற்றும் எல்லா வற்றையும் ...

தமது திருவருட் சத்தியால்,தோற்றுவித்தல்..வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல்...விளக்கஞ்செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்..எல்லாம் ஆனவர் என்றும் ..ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வ காருண்யர் என்றும் ..சர்வ வல்லவர் என்றும்..எல்லாம் உடையவராய் ..

தமக்கு ஒருவரும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெரும் தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் "'என்றும் சத்திய அறிவால் ஆறியப் படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்து விளங்குகின்றார் ..

அவர் இருக்கும் இடம் !

சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ...அந்த இடத்திற்கு  அருட்பெரு வெளி என்னும் பெயராகும் ...நாம் காணும் பஞ்ச பூத வெளி அல்ல ! நாம் காணும் ,அக்கினி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் போன்ற ஒளிகளில் ஒன்று அல்ல ! அவை அருள் ஒளியாகும் ,அவை இயங்கும் இடம்  அருள் நிறைந்த பெரு வெளியாகும் ..

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்னும் தலைப்பில் வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ள பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேன் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரு திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என் அரசே !

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை ,இவ் உலகத்தின் இடத்தே ஜீவர்கள் ஆகிய நாம் அறிந்து, அன்பு செய்து ,அருளை அடைந்து அழிவு இல்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,

பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும் பலவேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம்,பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இல்லாமல் விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனிமேல் நாம் இறந்து இறந்து ,பிறந்து பிறந்து .வீண் போகாமல் .உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு ,,வள்ளலார் சொல்லிய வண்ணம் .உண்மை அறிவு..உண்மை அன்பு..உண்மை இரக்கம் அதாவது ஜீவ காருண்யம் ..முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தெரிந்து கொள்வதற்குத் தகுந்த இடம்;---  ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுக் கடவுளாக விளங்குபவரை  ,,தமிழ் நாட்டில் உள்ள  கடலூர் மாவட்டம் வடலூரில்,''சமரச சுத்த சன்மார்க்க  சத்திய ஞான சபையில்''கடவுளை  ஜோதி வடிவில் ,இயற்கை விளக்கமாக புறத்திலே வைத்து உள்ளார் ....அதேபோல் உண்மைப் பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் வடலூரில் தோற்றுவித்து உள்ளார் . அதேபோல் அருளைப் பெறுவதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும்,வடலூரில் தோற்றி வைத்து உள்ளார் ..

அந்த உண்மையான உளவைத் தெரிந்து கொண்டால்...அவற்றை தொடர்பு கொண்டு, அதன்படி வாழ்ந்தால் இத்தருணமே தொடங்கி கருதிய வண்ணம் பெற்றுக் பெரும் களிப்பை அடைவீர்கள்

நாம் எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன் .தம்பி,உற்றார் ,உறவினர்,நண்பர்கள் .மற்றும் பழைய,சமய,மத  தெய்வங்கள் ,முதலானோர் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கும் மேலாக கோடி கோடி பங்கு அதிகமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாரி வாரி வழங்குவார் ..இது சத்தியம் ..இது சத்தியம்,இது சத்தியம்...

திருவடிப் புகழ்ச்சி பாடல் !

உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண
''உளவு'' எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக் கொண்டானைக்
கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்லானை இடர் தவிர்த்து இங்கு என்னை யாண்ட
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

மேலும் ஒரு உளவு சொல்லுகின்றார் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத்து தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து தாடும்
மாநடத்து அரசே என் மாலை அணிந்து அருளே !

 சேர்ந்திடுவே யொருப்படுமின்  சமரச சன்மார்க்கத்
திரு நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம்
ஒர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே
வார்ந்த கடல் உலகறிய மரணம் உண்டோ அந்தோ
மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணும் சம்மதியாது
சார்ந்திடு அம் மரணம் அதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே !

மேலே கண்ட பாடல்களுக்கு விளக்கம் தர வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.அதிலே தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் ...                    
மேலே கண்ட கருத்துக்களின்  வாயிலாக அருளைப் பெரும் ''உளவை'' மேலே சொன்ன விளக்கத்தாலும்,பாடல்களாலும் ,வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு ,வள்ளலாரைப்  போல் வாழ்ந்து மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று என்றும் அழிவில்லாமல் வாழலாம்.அதற்கு  எல்லாம் வல்ல,உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  வாழ்வாங்கு  வாழ்வோம்...இதுவே உளவாகும் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு