புதன், 29 மார்ச், 2017

மக்களை ஒன்று படுத்த முடியுமா ?


மக்களை ஒன்று படுத்த முடியுமா ?

பல்லாயிரம்
ஆண்டுகளாக    சாதி ,சமயம்,மதம் என்ற   பிரிவினையால்   மக்கள் அழியாத துன்பத்தில் வாழ்ந்து  கொண்டு உள்ளார்கள்... மக்களைப் . பிரித்தவர்கள் யார் ?  என்றால் அருள் பெற்ற ஆன்மீக வாதிகள் 

,மதங்களின் பெயரால் சமயங்களைப் பிரித்தார்கள்,சமயங்களின் பெயரால் சாதிகளைப் பிரித்தார்கள்.  சாதிகளின்  பெயரால் வேற்றுமையைப் பிரித்தார்கள் .

பின் வேற்றுமையில்  ஒற்றுமைக் காணுங்கள் என்கின்றனர் .இது நடக்ககூடிய   காரியமா ?என்றால் எக்காலத்திலும். நடை முறைக்கு ஒத்து   வராது.என்பது அறிவு சார்ந்த  அனைவருக்கும்  தெரியும் ,

வள்ளலார் வந்ததின்   நோக்கம் !

சாதி , சமயம்,  மதங்களை  ஒழித்துக் கட்டவே   அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ..வள்ளலாரை  இவ் உலகத்திற்கு அனுப்பி  வைத்துள்ளார் ...

எனவே தான்   இனி  வருவது சுத்த சன்மார்க்க காலம்  என்கின்றார் ..


சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 26மாதத்திற்கு மேல். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.

பிரஜோற்பத்தி வருடம்

சித்திரை மாதம் 1ஆம் நாள்


மேலே கண்ட   உண்மையை  மக்களுக்குத்    தெரியப்    படுத்துகின்றார் .

மேலும் பாடல் வாயிலாகத் தெரியப் படுத்து கின்றார் ..

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த  சிவ
சன்மார்க்க  சங்கம்   தலைப்பட்டேன் ---என்மார்க்கம் 
நன்   மார்க்கம்  என்றே  வான்  நாட்டார்   புகழ்கின்றார் 
மன்  மார்க்கத்தாலே   மகிழ்ந்து  !

இனி  வள்ளலார்  தோற்றுவித்த   சுத்த   சன்மார்க்கம்  ஒன்றினாலே  மக்களை  ஒன்று  படுத்த  முடியும்.!

மேலும் அகவலில் தெளிவாக  விளக்கி    உள்ளார் ..!

உலகினில்    உயிர்களுக்கு   உறும்  இடை யூறு எல்லாம் 
விலக   நீ    அடைந்து    விளக்குக     மகிழ்க 

சுத்த   சன்மார்க்கச    சுக நிலை பெறுக
உத்தமன்  ஆகுக   ஓங்குக    என்றனை 

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு