செவ்வாய், 21 மார்ச், 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?



சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்பது சாகாக்கல்வி கற்கும் மார்க்கமாகும்.

சாகாக்கல்வி என்பது மரணத்தை வெல்லும் வழியைக் காட்டும் உண்மையான மார்க்கமாகும்.

மரணத்தை வெல்வதற்கு அருளைப் பெற வேண்டும்.

அருளைப் பெறுவதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை விட்டு விலகிவிட வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் என்ன என்பதை வள்ளலார்  தெரிவிக்கின்றார்.அவற்றை கவனமாக படித்துப் பார்த்து விட்டு விட்டால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்க தகுதி உள்ளவர்களாவார்கள்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.

இவ்வளவு தெளிவாக வள்ளலார் சொல்லி உள்ள போதிலும்.சில சன்மார்க்க அன்பர்கள் .ஆற்றில் ஒரு காலும்.சேற்றில் ஒரு காலும் வைத்துக் கொண்டு. தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துக் கொண்டு உள்ளார்கள்

அதற்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்.!


ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரேவேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.

மேலும்

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையேபிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியேதள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

சமய மதங்களின் வழியாக கொலைக்கு காரணமான.மரணத்திற்கு காரணமான வினைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.எனவே சாதி்.சமயம்.மதங்களை பின் பற்ற வேண்டாம் என்பதை கண்டிப்பாக சொல்லுகின்றார்.

சாதி சமய சழக்கை விட்டேன் அருட்சோதியைக் கண்டேன் என்கின்றார் வள்ளலார்.

நாமும் சாதி்.சமய.மதங்களை பற்று அற விட்டு்.கருணைக் கொண்டு.அருளைப் பெற்று.மரணத்தை வென்று சுத்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்து காட்டுவோம்....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு