சனி, 11 மார்ச், 2017

குடும்பம் நடத்தும் கடவுள்கள்!

குடும்பம் நடத்தும் கடவுள்கள் !

சமயங்கள்.மதங்கள் எல்லாம் குடும்பம் நடத்தும் கடவுள்களையே மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.உண்மையான கடவுள் யார்? என்பது தெரியாமல்.அழிந்துபோகும் தத்துவங்களான.பிரம்மா.விஷ்ணு,.சங்கரன்.மகேச்சுவரன்.சதாசிவன்.ஏசு.அல்லா.புத்தன்.கிருட்டிணன்.ராமன்,முருகன், போன்ற பல ஆண் தெய்வங்களும்.பார்வதி்.சரஸ்வதி.லட்சுமி்.சீதை,வள்ளி தெய்வானை. ,அன்னை,    ஆதிபராசக்திகள் போன்ற பல பெண் தெய்வங்களையும். உண்மையாக இருப்பது போலவே .இடம.வாகனம்.ஆயுதம்.வடிவம்.ரூபம்.முதலிய பொம்மைகளை வடிவம் அமைத்து, ஆலயங்களை எழுப்பி ,அதன் மத்தியிலே   .உணர்ச்சி.இல்லாத,உயிர் இயக்கம் இல்லாத,கருணை இல்லாத . ஜட.விக்கிரங்களை வைத்து கடவுள் என்று பெயர ்வைத்து,குடும்பம் நடத்தும் தெய்வங்களை  அடையாளமாக வைத்து,  அலைய விட்டு விட்டார்கள்.அதையும் உண்மை என்று நம்பி.அன்றிலிருந்து இன்றுவரை      மக்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.பலன் ஒன்றும் இன்றுவரை அடைந்தார்கள்  இல்லை .அதைத்தான வள்ளலார் கீழே கண்ட பாடல் வரிகளில். தெரிவிக்கின்றார்.

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்தது இங்கு உண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண் மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெற எவ்வுலகும்
வாழ்ந்து ஒங்கக்  கருதி யருள் வழங்கினை என் தனக்கே
உலைவறு இப்போழுதே நற் தருணம் என  நீயே
உணர்த்தினை வந் தணைந்தருள்வாய் உண்மை உரைத் தவனே
சிலைநிகர் வன்  மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்த சிகா மணியே என் திருநடநா யகனே !

உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் தத்துவக் கலைகளை கற்பனைகளாக வடிவம் அமைத்து ,.இதுதான கடவுள்கள் என்று ,மக்களை நம்ப வைத்த... கண் மூடித்தனமான வழக்கத்தை   எல்லாம்,ஆழமான குழியைத் தோண்டி  மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும் என்கின்றார் வள்ளலார் .

உண்மையான,... என்றும் நிலையான கடவுள் ஒருவர் உள்ளார் அவரே ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்பதனை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,மக்கள்  என்றும் அழியாத அருளைப் பெற்று பேரின்பம் அடைய வேண்டும் என்பதற்காகவே ,''சுத்த சன்மார்க்கம்'' என்ற தனித் தன்மை வாய்ந்த மார்க்கத்தை தோற்றி வைக்க,இதுவே நல்லத் தருணம் எனக்கருதி  இப்பொழுதே அருள் வழங்கினாய் ...ஆதலால்  சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத்  தோற்றுவித்துள்ளேன் என்கின்றார் .

1872.ஆம் ஆண்டு தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற புதிய தலைப்பை வைத்து, உலக மக்களுக்கு  வெளிப் படுத்துகின்றார் .

இந்த மாபெரும் உண்மையைத் தெரிவித்து உணர்த்தி, என்னையும் என்றும் அழியாமல் வாழும் அருளை வழங்கி,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி    மரணத்தை வெல்லும் வழியையும் காட்டி,ஆட்கொண்ட ,சித்த சிகாமணியே திருநடநாயகனே என்று .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார் நமது அருட்தந்தை வள்ளலார் ...

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! அவர் குடும்பம் நடத்தும் கடவுள் அல்ல ! அவர்  அண்டங்கள் உலகங்கள், ஆன்மாக்கள்
உயிர்கள்,கிரகங்கள் அனைத்திற்கும் இயங்கும் சக்தியாக, இயக்கும் சக்தியாக,அருள் அணு ஒளியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பேரோளியாகும். அந்த ஒளியே கடவுளாகும்.

இனிமேல் நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புதிய,தனி நெறியைப் பின்பற்றி,வள்ளலார் காட்டிய  ஒழுக்க நெறியில் நின்று,என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று .ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் சுத்த பிரணவ  ஞான தேகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு