திங்கள், 6 பிப்ரவரி, 2017

தைப்பூசம் என்றால் என்ன ?

தைப்பூசம் என்றால் என்ன ?

பூசம் என்றால நிறைவு என்று பெயர். அதாவது பூரண சந்திரன் தோன்று நாளை பூச நாளாக வைத்துள்ளார்கள்.ஒவ்வொரு மாத பூச நந்நாளிலும் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கிறார்கள்.

தைப்பூசத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்தில் உள்ள உயிர்களுக்கு நன்மை பயக்கவும்.பக்குவம் உள்ள ஜீவர்களுக்கு அருள் வழங்கவும் நேரடியாக வந்து காட்சி தரும் திரு நாளாகும்.

ஆண்டவர் உலகு நோக்கி வருவதால் அன்று கிரகங்கள் உயிர்களுக்கு துன்பம் தராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்.  அன்று சுதந்திரமாக இறைவன் அருளைப்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி எவருக்கும் கிடைக்கவில்லை.

30-1-1874. ஸ்திரீமுக ஆண்டு தைத்திங்கள் 19.ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12.மணிக்கு சித்திவளாகத் திருமாளியின் திருவரைக்குள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சென்று வள்ளலாருக்கு பூரண அருளை வழங்கி அருட்பெருஞ்ஜோதியாக்கி அழைத்துக் கொண்டார் என்பது வரலாற்று உண்மையாகும்.

அந்த உண்மை நடப்பதற்கு முன்னமே வள்ளலார் பதிவு செய்து உள்ள அருட்பாடல்...

வருதருணப்பாடல் என்ற தலைப்பில் நான்கு பாடல்கள் மிகவும் முக்கியமான பாடல்கள்.அதிலே நான்காவது பாடல்...

என்சாமி எனது துரை  என் உயிர் நாயகமே இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்

பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேருடம்பிற் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்

தன்சாதி உடையப் பெரிய தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே

மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின்தனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே....

என்ற பாடல் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரும் நேரத்தையும்.காலத்தையும் முன்கூட்டியே தெரியப் படுத்துகின்றார்.

சித்திவளாகத்திற்கு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  இனி வருங்காலங்களில் வந்து அமர்ந்து அருள் வழங்கும் இடமாக சத்திய ஞானசபையை.ஆண்டவர் அருள் வாக்கின்படி வடலூரில் வள்ளலார் தோற்றிவைத்துள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பேருபதேசத்திலும் பதிவு செய்கின்றார்.

மேலும் சிலர்...இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ?,ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக்கொள்ளபடாதோ ? என்று வினவலாம்

ஆம்.இஃது தாம் வினவியது நலந்தான்.ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான்.நம்மவர்கள் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான்.நீங்கள் பெற வேண்டியதைப்பெற்றுக் கொள்கின்றதும் சத்தியந்தான்.ஆனால்....
முன் சொன்ன ரக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது .யாவெனில்...அசுத்த மாயா திரை.சுத்த மாயதிரை...என இரண்டுமாம்.இவை கீழ் பாகத்தில் ஒரு கூறூம் மேல் பாகத்தில் ஒரு கூறுமாய் இருக்கும்.கீழ் பாகத்தில் உள்ளது அசுத்த மாயாத்திரை.மேல் பாத்தில் உள்ளது சுத்த மாயாத்திரை இருக்கும்.

இவற்றில் அசுத்த மாயாத்திரை இகலோக போக லஷியமுடையது.சுத்த மாய திரை பரலோக சாத்தியத்தை உடையது.

இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது.முயற்சி இல்லாத சாதாரண மனுஷயர்களுடைய கீழ்பாகத்தில் இருக்கின்ற அசுத்த மாயை என்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார் ஆதலால் அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமே அல்லது பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளுதற்குக் கூடாது என்று திட்டவட்டமாக வள்ளலார் தெரியப்படுத்தி உள்ளார்.

வருகின்ற 9-2-2017.அன்று வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து காட்சித் தருகின்ற நாளாகும். இந்த நாளை விட்டால் மீண்டும் ஒரு ஆண்டு காலம் கழித்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் என்பதை கருத்தில் கொண்டு தைப்பூச ஜோதிதரிசனம் காண வாருங்கள் வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

எல்லோருக்கும் தாய்.தந்தை.அண்ணன்.தம்பி.முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ.அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் வடலூர் சத்திய ஞானசபை ஜோதி தரிசனமாகும்.

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்துகள்:

13 பிப்ரவரி, 2017 அன்று PM 12:45 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

arputhmana seithi

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு