திங்கள், 30 ஜனவரி, 2017

ஆட்சியில் இருக்க தகுதி உடையவர்கள் !

ஆட்சியில் இருக்க தகுதி உடையவர்கள் !

கொலை.புலை தவிர்த்தவர்கள் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டும்.

உலகில் உள்ள எந்த ஆட்சியாக இருந்தாலும்.இதுதான் உண்மை.

மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும்.நாடாளுமன்ற உறுப்பினர்களும்.நாடாளுமன்ற மந்திரிகளும்.கொலை.புலை தவிர்த்தவர்களாகவே இருக்க வேண்டும்.

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்.....என்று திருவள்ளுவரும்.வள்ளலாரும் சொல்லி உள்ளார்கள்.

இவற்றை கடைபிடிப்பவன் எவனோ அவனே மனிதன்.மற்றவர்கள் எல்லாம் மிருககுணம் உள்ளவர்கள்.

எனவே மக்களை ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும். கொலை .புலை தவிர்த்து இருந்தால் மட்டுமே ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்.

இல்லையேல் ஆட்சி அழிந்துவிடும்.இது இயற்கையின் நியதி.இதை யாராலும் மாற்ற முடியாது. தடுக்க முடியாது.

உயிர்கள் மேல் கருணை இல்லாத ஆட்சி கடுகி ஒழிந்துவிடும்... இதுதான் வள்ளலார் வாக்கு.

ஆட்சியாளர்களே தெரிந்து.புரிந்து.அறிந்து நடந்து கொள்ளுங்கள்

சொல்லிபுட்டேன் அவ்வளவுதான்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு