புதன், 1 பிப்ரவரி, 2017

குரு வேண்டுமா ? வேண்டாமா ?

குரு வேண்டுமா ? வேண்டாமா ? என ISO அண்ணா துரை அய்யா அவர்கள் கேட்டு உள்ளார்.

வள்ளலார் வாழ்ந்து காட்டிய வழியில் செல்வதற்கும்.சாகாக்கல்வி கற்பதற்கும்.குரு என்பவர் ஒருவர் வேண்டுமா ? வேண்டாமா ? என்ற கேள்வி. எண்ணம் நிறைய சன்மார்க்க அன்பர்கள் உள்ளத்திலே சந்தேகம் நிறைந்து உள்ளது.

மேலும் சன்மார்க்க சங்கம் வைத்துக் கொண்டுள்ள சில சன்மார்க்க அன்பர்கள்.குரு உபதேசம் செய்வதும்.தீட்ஷை கொடுப்பதும்.சாகாக்கல்வி சொல்லிக் கொடுக்கிறேன் என்றும்.உடம்பை மரணம் அடையாமல் நீடிக்க காயகல்பம் செய்து தருகிறேன் என்றும்.பணம் பறிக்கும் நோக்கத்துடன் .சமயவாதிகள்போல் செயல் பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.அவர்கள் மரணத்தை வெல்லும் தகுதி உடையவர்களா என்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைக்கு .குருவோ.குரு உபதேசமோ.தீட்ஷையோ தேவையே இல்லை....இவைகள் யாவும் சமய.மதங்களைச் சார்ந்தது.

சாதியும்.மதமும்.சமயமும் பொய் என்றார் வள்ளலார்.அப்படி இருக்க சமய மதங்கள் சொல்லி உள்ள.அவர்கள் பின் பற்றிய குருவை.குரு  தீட்ஷை பெற வேண்டும் என்ற பழக்கத்தை எப்படி வள்ளலார் ஏற்றுக் கொள்வார்.சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் காட்டியுள்ள சுத்த சன்மார்க்கம் என்பது ஞான மார்க்கம்.மரணத்தை வெல்லும் மார்க்கம்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்  நேரடி தொடர்பு கொண்டு அருளைப் பெறும் மார்க்கம்.அதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம். இது தனி மார்க்கம். புதிய மார்க்கம். எனவே இந்த மார்க்கத்தைப் பற்றி வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும்.வேறு எவருக்கும் தெரியாது.

வள்ளலாருக்கு குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை அவசியம் சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலாரே திருஅகவலில் பதிவு செய்து உள்ளார்.

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் அருள் வரிகள் வாயிலாக தெரிவித்து உள்ளார்.

மேலும்.கற்றதும் நின்னிடத்தே.பின் கேட்டதும் நின்னிடத்தே.களித்ததும் நின்னிடத்தே என்கின்றார்.ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.ஒதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்வுர செய்தாய் என்றும்.ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும் நிறைய அருட்பா பாடல்களிலே தெரிவித்து உள்ளார்.

மேலும் உபாய மார்க்கம்.உண்மை மார்க்கம்.அனுபவ மார்க்கம் என பிரித்து.உபாய மார்க்கத்தை நம்பாதீர்கள்.உண்மை மார்க்கத்தை தெரிந்து அனுபவ மார்க்கத்திற்கு வாருங்கள் என்கின்றார்.சமய மத மார்க்கங்கள் யாவும் உபாய மார்க்கம்.அவற்றை பின் பற்றாதீர்கள் என்கின்றார்.அதில்தான் குரு என்ற உபாயத்தை வைத்து ஏமாற்றி உள்ளார்கள்.அதனால் எந்த பயனும்.எந்ந லாபமும் இல்லை என்கின்றார்.

அனுபவத்தால் அறிந்து கொள்வதுதான் சுத்த சன்மார்க்கம்.அனுபவத்தால் அறிக என்று அருட்பாவில் பல இடங்களில் பதிவு செயது உள்ளார்.

மேலும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம் என்னவென்றால்.எல்லா ஜீவர்கள் இடத்தும் தயவும்.ஆண்டவர் இடத்தில் அன்புமே முக்கிய சாதனமாகும் என்கின்றார்.உபாய குருவோ.உபாய சாதனமோ சுத்த சன்மார்க்கத்திற்கு தேவை இல்லை.

புதியதாக  சன்மார்க்கத்திற்கு வரும் அன்பர்களுக்கு அனுபவம் உள்ள மூத்த சன்மார்க்கிகள் உண்மையான வழியைக் காட்டலாம்.குரு உபதேசம என்னும் சமய.மத செயல்களை பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

சுத்த சன்மார்க்கம் ஜீவ காருண்ய ஒழுக்க மார்க்கம்.அவரவர்கள் ஒழுக்கத்திற்குத் தகுந்தாற் போல் ஆன்ம லாபமும்.அருள் லாபமும் கிடைக்கும்.

வள்ளலார் பேருபதேசத்தில் கீழ் கண்டவாறு பதிவு செய்து உள்ளார்.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. என்பதை தெளிவாக தெரிவித்து உள்ளார்.

எனவே சன்மார்க்கிகளுக்கு குரு உபதேசமோ.தீட்ஷையோதேவை இல்லை.சாகாக்கல்வி என்பது வள்ளார் சொல்லியுள்ள நான்கு ஒழுக்கங்கள் மூலமாக பெற வேண்டியதாகும்.ஒழுக்கங்களை அனுபவம் உள்ள சன்மார்க்கிகள் சொல்லித்தரலாம். கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைவருக்கும் குரு எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்பதை வள்ளலார்.

ஆதி அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.இது நீவீர் மேலே ஏறும் வீதி.மற்றைய வீதிகள் எல்லாம் கீழ் செல்லும் வீதி என்கின்றார்.

கீழே என்பது மரணம் அடைந்து மண்ணிற்கு போவது.மேலே என்பது மரணம் அடையாமல் அருட்பெருஞ்ஜோதியுடன் கலப்பது.என்பதாகும்.

இன்னும் விரிக்கில் பெறுகும்.

ஞானசரியை நான்காவது பாடல்...

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே.கற்றது எல்லாம் பொய்யே நீர் கழித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே.உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே.

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே.

எணடகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே..!

என்னும் பாடல் வாயிலாக சாட்டை அடிக் கொடுத்து புதிய சுத்த சன்மார்க்கப் புரட்சி செய்து உள்ளார்.

இந்த ஒருபாடலே போதும் என நினைக்கிறேன்.

தொடரும்....

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு