வியாழன், 19 ஜனவரி, 2017

மக்கள்பக்கம்இருப்போம் !

மக்களின் பக்கம் இருப்போம் !

இப்போது ஆன்மீகம் வேண்டாம்.மக்களின் எண்ணங்கள் யாவும் .தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்.பண்பாடு.உழவர்களின் வாழ்க்கை.உழவர்களின் தவிப்பு.மற்றும் உழவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.மாணவர்கள்.இளைஞர்களின்.நியாயமான கொந்தளிப்பு யாவும் அரசியல் ஆட்சி.சட்த்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

இதுவும் ஒரு சிறந்த ஆன்மீகம்.சாதி.சமயம்.மதம் அற்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் போராட்டம்.

இது ஆரம்பம்.இனி மனித சமுதாயம்.புதிய சிந்தனைக்கு ஆரம்பமாகிக் கொண்டு  உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்போதுதான் உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பது உயிர் வதை இல்லையா ? ஐல்லிகட்டுதான் உயிர்வதையா ?என்பதை அனைத்து தர மக்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதுதான் வள்ளலார் சொன்ன.உயிர்களை கொல்லாதே.அதன் மாமிசத்தை உண்ணாதே என்னும். ஜீவகாருண்யம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.

சன்மார்க்கிகள் சொல்லிக் கொண்டு இருந்த கொல்லாமை என்னும்  வார்த்தைகளை மக்களே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதுதான வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க சத்திய சங்க காலத்தின் ஆரம்பம்.இனி சன்மார்க்கம் தான் உலகம் முழுவதும் பரவும் காலம்.

வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை தமிழ் நாட்டில் தான் விதைத்து உள்ளார்.இனி உலகம் முழுவதும் வேர் ஊன்றி பரவ தொடங்கி விட்டது.

இவை ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டும் அல்ல.இதில் எல்லாம் அடங்கி உள்ளது.அரசியல்.ஆட்சி.சட்டம்.ஒழுக்கம்.விவசாயம்.வாழ்க்கை அனைத்தும் அடங்கி உள்ளது.

இனி வருங்காலம்.மாணவர்கள்.இளைஞர்கள் கையில்தான் உள்ளது.சன்மார்க்கிகள் அவர்களுக்கு துணையாக இருந்து .அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு