ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

போலி ஆன்மீகம்.தவிர்த்து உண்மை ஆன்மீகம் அறிவோம் !

போலி ஆன்மீகம்.தவிர்த்து உண்மை ஆன்மீகம் அறிவோம் !

உலகில் பல்லாண்டு காலமாக போலி ஆன்மீகம் பரவி கொண்டு வருகின்றன.

அவற்றை பின் பற்றுபவர்களை உண்மைத் தெரியாமல்  பாராட்டுகிறார்கள்.போற்றுகிறார்கள்.காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

அளவில் அடங்காத பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு.ஆண்டவருக்கு.அபிஷேகம்.செய்வதும். காணிக்கை.கொடுப்பதும்.தவம்.தியானம்.யோகம் செய்வதாலும்.குகைகளில் சென்று அமர்ந்து கொள்வதாலும் .உண்மையான ஆன்மீகவாதி ஆகிவிட முடியாது.

இந்த உலகத்தில் உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை போதிக்க .உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்ட ...வருவிக்க உற்ற ஒரே அருளாளர் வள்ளலார் மட்டுமே என்பதை இறைவனே சொல்லுகின்றார்.

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்

பேய் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது

உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போருற்று இரந்து வீண் போயினர்

இன்னும் வீண்போகாதபடி விரைந்தே சுத்த சன்மார்க்க நெறிகாட்டி

மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ

என் பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே.

நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்தவரை ஓங்கும் நீதி நடராஜ பதியே !.

என்னும் பாடல்வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார்.

எனவே போலியான ஆன்மீகத்தை விட்டு உண்மையான ஆன்மீகத்திற்கு வாருங்கள் என உலக மக்களை கூவி கூவி அழைக்கின்றார் வள்ளலார்.

எனவேதான்

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே !

என்கிறார் .

உண்மையான ஆன்மீகத்தை தெரிந்து கொள்ளவும். அருட்பெருஞ்ஜோதி ஆண்வரின் அருளைப் பெறவும் .வடலூருக்குச் செல்வோம்.வாருங்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு