வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

விபூதி வைக்கலாமா ? வேண்டாமா ?

விபூதி வைக்கலாமா ? வேண்டாமா ?

வள்ள்லார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள்.விபூதி மட்டும் அல்ல . எந்த சின்னங்களும் அணியக்கூடாது.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.மற்றைய  மார்க்கங்கள்.சொல்லியுள்ள.ஆச்சார .சங்கற்ப விகற்பங்கள் .எவற்றையும் பின் பற்றுவது .அறியாமையாகும் .தவறானதாகும்.

நாம் தினமும் சன்மார்க்க சங்கங்களில் வள்ளலார் சொல்லி உள்ள. மிகவும் அழுத்தமாக  அறிவுறுத்திய  விண்ணபங்களை அனைவரும் சொல்லிக் கொண்டே வழிபாடும் செய்கிறோம். வழிபாடு செய்து கொண்டே தவறும் செய்து கொண்டு வருகிறோம்.

வள்ளலார்.தன்னுடைய உருவப் படமே வேண்டாம் என்று சொல்லி. மண்ணால் செய்து கொண்டுவந்த தன்னுடைய உருவத்தை கிழே போட்டு உடைத்தார்.மறைத்தார் வள்ளலார்.

 மீண்டும் அவர் உருவத்தை அன்பினாலும்.அறியாமையாலும். செய்து.அவருக்கே விபூதி அடித்து .சமய மதவாதி ஆக்கி.அழகுபார்த்து அசிங்கப் படுத்தியவர்கள் நமது சைவ சமயத்தவர்கள்.கேட்டால் விபூதிக்கு ஆயிரமாயிரம் விளக்கம் சொல்லி கேட்வர்களை அடக்கி விடுவார்கள்.

விபூதியின் கொள்கையே சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானது. மரணம் அடைந்தால் பிணத்தை எரித்து சாம்பலாக்குவது .சமய மதங்களின் கொள்கை.அந்த சாம்பலின் அடையாளம்தான் விபூதி. முடிசான்ற மன்னர் எல்லாம் ஒரு பிடி சாம்பலாகிவிடுவான்.என்பதாகும்.மேலும் ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்பதாகும்.மேலும் பிறக்காமல் இருக்க வேண்டும் எனறு இறைவனிடம் கேட்பது சமய மதக் கொள்கைகளாலும்.

இறந்தால் மீண்டும் பிறப்ப உண்டு என்பதே தெரியாமல் வேண்டிக் கொண்டு உள்ளார்கள்.

நமது வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை.மரணம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதாகும்.அப்படி முயற்சி தவறி அஜாக்கிறதையால் மரணம் வந்தாலும் எரிக்கக்கூடாது .புதைக்க வேண்டும் என்கிறார். ஆண்டவர் மீண்டும் எழுப்பித்தருவார் அதனால் எரிக்காதீர்கள்.

இந்த உண்மை தெரிந்து இருந்தால் பிணத்தை எரிக்கவும் மாட்டார்கள்.சாம்பலை நெற்றியில் உடம்பு எல்லாம் அணிந்து கொள்ளவும் மாட்டார்கள்.இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கவும்.அழிக்கவும் தான் வள்ளலார் வந்தார்.இறுதியில் அவருக்கே நெற்றியில் பட்டையை அணிவிக்க துணிந்து விட்டோம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விபூதி இல்லாத வள்ளலார் படம் உலகம் மழுவதும். எங்குமே இல்லை.நான் ஈரோடு சன்மார்க்க சங்கத் தலைவராக இருந்த போது.நானும் விபூதி அடிப்பதை நிறுத்தினேன்.வள்ளலார் உருவத்திற்கும் விபூதி அடிக்காத  ஸ்டீலினால் செயத கட்அவுட் செய்து சன்மார்க்க சங்கத்தில் வைத்தேன்.அந்த படம் இன்னும் என் வீட்டில் உள்ளது.அந்த படத்தையும் சத்திய ஞானசபை படத்தையும்  வேனில் வைத்து தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றேன்.அப்போது எனக்கு வயது முப்பது.

தமிழ் நாட்டில் வள்ளலாருக்கு விபூதி வைக்காத முதல் படம் செய்து வைத்தது ஈரோடு கதிர்வேல் ஆகிய நான்தான் என்பது நிறைய பேருக்கு இன்னும் தெரியாது.

பெரிய போராட்டம்.!

விபூதி இல்லாத வள்ளலார் படத்தைப் பார்த்ததும்.ஈரோடு சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் எனக்கு அளவில்லாத மறைமுகமானத் தொல்லைகளைக் கொடுத்தார்கள்.என்னை கொலை செய்யவும் துணிந்தார்கள்.நான் ஏதற்கும் அஞ்சவில்லை பயப்படவும் இல்லை.வள்ளலாரின் திருஅருட்பா ஆதாரங்களையும் சுத்த சன்மார்க்கத்தின் விளக்கங்களையும் எடுத்துச் சொல்லி அவர்களின் உணர்வுகளையும்.எதிர்ப்புகளையும் சிதரடித்தேன்.பின்பு என்னிடம் நெருங்கவே பயந்தார்கள் இவைகள் யாவும் தமிழ்நாடு முழுவதும்  தீ போல் பரவியது தமிழகம் எங்கும் பரவியது.வடலூர் தெய்வ நிலையத்திற்கும் சென்றது.

அடுத்து ஈரோட்டில் மூன்றுநாள் சன்மார்க்கசங்க முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் எடுத்தோம்.அந்த விழாவிற்கு தமிழ் நாட்டில். அப்போது உள்ள சன்மார்க்கத்தில் முக்கியமான..மகாலிங்கம்.கிரிதாரிபிரசாத்.ஊரன் அடிகள்.துறவி கந்தசாமி.மு.பாலு.விழுப்புரம் கோவிந்தசாமி.டாக்டர் ராஜமாணிக்கம்.சேலம்டாக்டர் துரைசாமி.பழ சண்முகனார்.ஓம் தத்பத்அடிகள்.சங்கரய்யா .நீதிபதி பழனிச்சாமி.பஞ்சாச்சரம்.முத்துக்குமார்.மணி.பாண்டுரங்கன்.கருனாநிதி.மற்றும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டு மாவட்ட தலைமை நீதிபதி.மாவட்ட ஆட்சியர் .மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.திரு பாஸ்கரன். போன்ற உயர் அதிகாரிகளின் தலைமையில் மூன்று நாட்கள் விழா அனைவரும் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடத்தினோம்.

அந்த விழாவில் தான் வடலூரில்்  வள்ளலார் தெய்வ நிலையங்களின் மிகவும் முக்கியமான சீர் சிருத்த பணிக் கொள்கைகள் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது.

அதில் மிகவும் முக்கியமானது வள்ளலார் படத்திற்கு விபூதியோ.வேறு சின்னங்கள் எதுவுமே அணிவிக்கக்் கூடாது.

அடுத்து மகாமந்திரமான."அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞாஜோதி!'' என்னும் மந்திரத்தை பிரித்து பிரித்து சொல்லாமல்  ஒரே முறையில் சொல்ல வேண்டும் என்றும்.. வடலுர் தெய்வ நிலையங்கள் வெளியிடும் புத்தகங்கள்.பத்திரிகைகளில்.எவற்றிலும் வள்ளலார் உருவ படத்திற்கு விபூதி போன்ற சமய சின்னங்கள் உள்ள படங்களை வெளியிடக்கூடாது என்றும் பல முக்கியமான தீர்மாணங்களுடன் விழா நிறைவு பெற்றது.

அடுத்து மகாலிங்கம் அவர்கள் இராமலிங்க பணிமன்றம் சார்பில் ஆயிரக்கான .விபூதி இல்லாத வள்ளலார் படங்கள் வெளியிட்டார்.அதன் பின்னர்தான் விபூதி இல்லாத படங்கள் வெளிநாடு. தமிழகம் எங்கும் வந்தன.

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களிலூம் வள்ளலார் படங்களுக்கு விபூதி இல்லாத படங்களே இன்று வரை வெளியிடப்படுகின்றது.அதன் பின்பு தான் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பது பேசத் தொடங்கினார்கள்.எனக்கு உற்ற துணையாக துறவி கந்தசாமி அய்யா அவர்கள். தோள் கொடுத்தார்.இது வரலாற்று உண்மைகள்.

மேலும் ஞானசபையில் சபேசன் என்ற ஐயர் நடராஜர் சிலை வைத்து உருவ வழிபாடும் ஜோதி வழிபாடும் செய்து வந்தார் அவரை எதிர்த்து போராடி.உருவ வழிபாடு ஞானசபையில் செய்யக்கூடாது.என்று  ஞானசபை சாவியை பிடுங்கி அவரை வெளியே ஏற்றுவதில் தொடங்கி வைத்தவன் ஈரோடு கதிர்வேல் ஆகிய நான்தான்.வடலூர் மக்கள் சிலபேர் அய்யருக்கு ஆதரவாக என்னை அடிக்க துறத்திக் கொண்டு வந்தார்கள்.அதையும் முறிஅடித்தேன்.அதற்கு பிறகுதான் விழிப்பு உணர்வு சன்மார்க்கிகளிடம் ஏற்பட்டது. அவற்றை விரிக்கில் பெறுகும்.

தமிழ் நாட்டில் சுத்த சன்மார்க்கம் பற்றி மேடையில் முழங்குவதற்கு.துறவி கந்தசாமி.ஈரோடு கதிர்வேல் விட்டால் ஆட்கள் இல்லை.இன்று உலகம் முழுவதும். ஆன்ம நேய உடன் பிறப்புக்கள் புற்று ஈசல் போல் வந்து கொண்டு உள்ளார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகவும்.மன நிறைவாகவும் உள்ளன.

ஞான சபையிலும் விபூதி பிரசாதம் வழங்க வேண்டாம் என்று இனிப்பு வழங்கப் பட்டு வருகின்றது.

இன்னும் தருமச்சாலையிலும்.மருதூரிலும்.கருங்குழியிலும்.மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திலும்.விபூதி வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அவற்றையும் தூய்மை படுத்த வேண்டிய கடமை சுத்த சன்மார்க்கிகளிடம் உள்ளது.

வள்ளலார் சொல்லிய சுத்தசன்மார்க்கம் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் மறைமுகமான முறையில் சமய மதவாதிகளின் சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு உள்ளது . எல்லாமே சன்மார்க்கத்தில் இருந்து கொண்டே சன்மார்க்க வேடம் போட்டுக் கொண்டு சமயவாதிகளினால்  மறைமுகமான சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

அவர்களை இனம் கண்டு சுத்த சன்மார்க்கிகள்  அவர்களை விளக்காமல் புத்தி புகட்டவேண்டும்.

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால்.சுத்த சன்மார்க்கம் வளர்ந்தால்தான் .வள்ளலார் சொன்ன சாதி.சமய. மத  மூட நம்பிக்கையான ஆச்சார சங்கற்ப விகற்பங்களை அகற்ற முடியும்.

தயவு செய்து சொல்லுகிறேன் .நீங்கள் விபூதி அணிந்து கொள்ளுங்கள்.நாமம் போட்டுக் கொள்ளுங்கள்.குல்லா அணிந்து கொள்ளுங்கள்.சிலுவை அணிந்து கொள்ளுங்கள்.அது உங்கள் விருப்பம். வள்ளலார் உருவப் படத்திற்கு எந்த சமய.மத சின்னங்களையும் அணிவிக்காதீர்கள்.

அணிவித்து வள்ளலார் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.அந்த பாவம் உங்களை சும்மா விடாது.

இப்படி எல்லாம் இந்த மக்கள் அறியாமையாலும்.ஆர்வத்தாலும் செய்வார்கள் என்பதால்தான் தன்னுடைய உருவ படமே வேண்டாம் என்றார் வள்ளலார்.

இறந்தவர்களுக்குத்தான்.படம் வைத்து மாலைபோட்டு மரியாதை செலுத்துவார்கள்.வள்ளலார் மரணத்தை வென்றவர்.அவருக்கு உருவமே கிடையாது.அவர் உருவம் ஒளி உருவம் .என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த உண்மையே தெரியவில்லை என்றால்.சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து. எப்படி அருளைப் பெறப் போகிறீர்கள்.மரணத்தை வெல்லப் போகிறீர்கள்.

சின்ன சின்ன விஷயமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பெரிய விஷயம் எப்படி சாத்தியமாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதினியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் அற்புதமே.என்கிறார் .

அந்த அற்புதத்தை நாமும் பெற வேண்டும். பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கம். உலகத்தில் உள்ள அனைவருக்கும் போதிக்கின்றது.

எனவே அற்ப விஷயங்களுக்கு உங்கள் மனதை செல்லவிடாமல்.அருளைப் பெறும் .தீவிர முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு