வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஒர் அன்பான வேண்டுகோள் !

மாணவ. மாணவிகள் இளை
ஞர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்!

வள்ளலார் அன்றே சொன்னார் !

சுமார் 150.ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் சொன்னார்.

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு.எல்லா உயிர்களிலும் இறைவன் குடிஇருக்கின்றான்.எனவே எல்லா  உயிர்களையும் தன் உயிர்கள் போல் பாவியுங்கள்.என்று மிகவும் வேதனைப்பட்டு.வருத்தப்பட்டு அழுது புலம்பி சொன்னார்.

உயிர்க்கொலை செய்வதும் தவறு பாவம்.அதன் புலாலை.உண்பதும் தவறு பாவம் என்று சொன்னார்.

நம் மக்கள் அறியாமையால்.அறிவு இல்லாதவர்கள் காட்டிக் கொடுத்த.கட்டிக் கொடுத்த கடவுளின் பெயரால் உயிர்களை பலிஇடுவது..அதன் புலாலை உண்பது.கொடிய பாவச் செயலாகும் என்பதை  மக்களுக்கு அறிவுறித்தினார்.போதித்தார்.

அவற்றை.அந்த கொடிய செயலை தடுப்பதற்காகவே .சங்கத்தை ஆரம்பித்தார்.அதற்கு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற அமைப்பை உறுவாக்கினார்.அதில் மிகவும் முக்கியமானது .தலைமையானது ஜீவகாருண்யம் தான் என்பதை மக்களுக்கு விளக்கி.ஜீவகாருண்ய ஒழுக்கம் .என்ற மாபெரும் சக்தி வாய்ந்த உண்மை ஒழுக்கம் நெறிகள் அடங்கிய .அருள் நூலை எழுதி வெளியிட்டார்.

அந்த நூல்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள  சன்மார்க்கிகளால் மக்களுக்கு போதிக்கப் படுகிறது. வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள்.தன் வாழ்நாள் முழுவதும் உயிர்க் கொலையும் செய்ய மாட்டார்கள்.புலால் என்னும் மாமிசத்தையும் உண்ணமாட்டார்கள்.

வள்ளலார் இரண்டே சாதியைப் பிரித்தார்.ஒன்று உயிர்க்கொலை செய்யாதவர்கள் புலால் உண்ணாதவர்கள்.ஒன்று உயிரக்கொலை செய்பவர்கள் புலால் உண்பவர்கள்.எனப்பிரித்தார்.

புலால் உண்ணாதவர்களை அக இனத்தார் என்றும்.புலால் உண்பவர்களை் புற இனத்தார் என்றும் பிரித்தார்.

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும்்.கடவுளை வணங்கவோ.வழிபடவோ தகுதி அற்றவர்கள.அவர்களுக்கு கடவுளின் அருள் .கடவுளின் பார்வை எக்காலத்திலும் கிடைக்காது.என்றும் அவர்களின் குடும்பத்தில்..துன்பம்.துயரம்.அச்சம்.பயம் போன்ற தீராத பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் என்றும்.் அவர்களுக்கு ஆன்ம நெகிழ்ச்சியோ.ஆன்ம உறுக்கமோ. ஆன்ம மகிழ்ச்சியோ. அருளின் விளக்கமோ. என்ன என்பதே தெரியாமல்.புரியாமல் வாழ்ந்து மாண்டு அழிந்து போவார்கள் என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார்.

இன்று உலகம் முழுவதும் பீட்டாவின் செயல்பாடுகள் குறித்து தமிழக மாணவ மாணவிகள.மற்றும்பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி கண்டு உள்ளார்கள்.மிகவும் பாராட்டக்கூடியது.போற்றக்கூடிய செயல்களாகும்.அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.அவற்றிற்கு என்னுடைய முழு ஆதரவையும் தந்து உள்ளேன்.

அதே நேரத்தில்.மாணவ மாணவிகள். பொது மக்கள் அனைவரும் எந்த உயிர்களையும் கொலை செய்யவோ.அதன் புலாலை உண்ணாமலோ இருந்தால்.மிகவும் பாராட்டுக்குறியது.போற்றக்கூடியதாகும்.  வாய் இல்லாத எல்லா  உயிர்களுக்கும்். நம்மைப்போன்றே. அவைகளுக்கும் உயிரை  இறைவன் படைத்து உள்ளார்.கொடுத்து உள்ளார்.

 எத்துனையும் பேதம் இல்லாமல் எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் வந்து விட்டாலே.நம் வீடும்.நம் நாடும் உயர்ந்து விடும்.

கருணை இல்லாத ஆட்சி கடுகி அழிந்துவிடும்.

நாம் அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இன்றில் இருந்து எந்த உயிர்களையும் கொலை செய்யமாட்டோம்.அவற்றின புலால் என்னும் மாமிசத்தை உண்ணமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாய்.உங்கள் அனைவரையும்.வாழ்த்தி. வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தமிழ் நாட்டில் தோன்றிய முற்றும் உணர்ந்து .தெரிந்து.அறிந்து மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர.வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிய.் வள்ளலார் அவர்கள் உலக மக்களுக்கு போதித்த உண்மையான வாழ்க்கை முறை ஒழுக்க நெறியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு