வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஒன்பது ஓட்டையை அடைப்பவனே மனிதன் !

ஒன்பது ஓட்டையை அடைப்பவனே மனிதன் !

உலக போகத்திற்கு மனித உடம்பில் ஒன்பது துவாரம மாயையால் படைக்கப் பட்டு உள்ளது, அந்த துவாரங்களை அடைக்கத் தெரிந்தவன் எவனோ அவனே மனிதன்,

 ஒன்பது துவாரங்களின் செய்கையால், ஒன்பது திரைகளாக ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது், திரைகளை நீக்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களை அடைக்க வேண்டும்.

 அதன்பின்தான் உச்சி திரக்கும் , விந்து நாதம் அடைப்பட்டு, பரநாதம் தோன்றும், பரநாதம் ஆன்மாவில் இரங்கி தொடர்பு கொள்ளும் போது,அதாவது அணைகின்ற போது அருள் சுரக்கும் ,அந்த அருள் பேராற்றல் உடம்பு முழுதும் நிரம்பி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

ஒன்பது துவாரத்தையும் அடைத்தவர்  வள்ளல்பெருமான் ஒருவரே. எனவேதான் அவருக்கு அருள் அறிவு தோன்றிற்று,

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டு நீ யொழியாதே அந்தோ ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும்

ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருட்பெரும்சோதி கண்டு ஆடேடி பந்து !

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

மேலும் சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை கூற்று ஆசைப்படும் என்கிறார்.கூற்றுவன் என்றால்  எமன். ஆசையோடு வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான் .

எனவே ஒன்பது துவாரத்தையும் அடைத்து  உச்சி துவாரத்தை திறக்கும் வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்.

அதுதான் திருக்கதவு திறத்தல் !

திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருவுருக் காட்டாயோ

உருக்கி அமுது ஊற்று எடுத்து என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே யாக்குற மெய் உணர்ச்சி அருளாயோ

கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ

செருக்கு கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத்து அரசே சித்த சிகா மணியே திருநட நாயகனே!

ஒன்பது கதவையும் அடைத்தால் தான் திருக்கதவு திறக்கும். திருக்கதவுத் திறந்தால் தான் அருள் சுரக்கும் அருள் சுரந்தால்தான் மரணத்தை வெல்ல முடியும்.

சுத்த சன்மார்க்கிகள் ஒன்பது துவாரத்தை அடைக்கும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சீவகாருண்ய ஒழுக்கம், உண்மையான சத்விசாரம் என்ற இரு வழிகளினால்தான் ,ஒன்பது துவாரத்தை அடைக்க வேண்டும்...

மேலும் தொடரும்....

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு