செவ்வாய், 17 ஜனவரி, 2017

தமிழ் நாட்டை யார் ஆளுகிறார்கள் ?

தமிழ் நாட்டை யார் ஆளுகிறார்கள் ?

தமிழ் நாட்டை மத்திய அரசு ஆள்கிறதா.மாநில அரசு ஆள்கிறதா ? என்பதே தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை ஆளும் மந்திரிகள் அனைவரும். அதிகாரிகள்.அனைவரும் கொள்ளை அடித்து குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம் அனைத்திற்கும்் .உண்டான ரகசிய விபரங்கள் மத்திய அரசிடம் சிக்கி விட்டன.அதனால் மத்திய அரசை மீறி எந்த செயகளும் செய்ய முடியாமல்.தமிழக மந்திரிகள் மவுனிகளாக.மூடர்களாக இருக்கிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முடியாமல் மக்கள் போராடிக் கொண்டு உள்ளார்கள்.தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளது.மிகவும் கேவலமாக உள்ளது.

தமிழக அரசு தமிழர்களின் உரிமையைக் காப்பாற்ற முடியாமல் தலை குனிந்து செத்துக் கிடக்கிறது.

மாநில ஆட்சி எதற்கு ?  மத்திய அரசிடமே தமிழர்களை அடகு வைத்து விட்டு போக வேண்டியது தானே.

மக்களால் தேர்ந்து எடுத்துள்ள தமிழக அரசு .துணிவு இருந்தால்.மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்காமல்.அவர்களின் அனுமதியைப் பெறாமல்.தமிழக ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்.இல்லையேல் ஆட்சியை களைத்துவிட்டு வெளியேறுவது தான் ஆட்சியாளர்களின் அறிவார்ந்த செயலாகும்.

பின் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு