செவ்வாய், 17 ஜனவரி, 2017

தமிழ் நாட்டு உறவுகளே வந்தனம்.

தமிழ் நாட்டு உறவுகளே வந்தனம்.

ஜல்லிக்கட்டு விழா நடத்த எவரிடத்திலும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

பாது காப்பு வேண்டி காவல் துறையிடம் அனுமதி கேட்டால் தானே பிரச்சனை.

உங்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவை இல்லை. நீங்கள் உணவு உண்பதற்கு பாதுகாப்பு தேவையா ? அதுபோல் அவரவர்கள் அவரவர் ஊர்களில் ஐல்லிக்கட்டு விழா நடத்தி மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை எப்போது போல்
 கொண்டாடுங்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அரசையும் ஆட்சியாளர்களையும்.காவல் துறையும் கேட்டா.தைப்பொங்கல் விழாவாக நான்கு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடினோம் .

எனவே எவருடைய பாதுகாப்பம் அனுமதியும் தேவை இல்லை.

நம்முடைய  தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு  முறைககளை சீர் அழிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் மத்திய அரசும் மாநில அரசும் செயல் படுகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா பண்டிகைகளையும் விழாக்களையும் முதலில். தடை செய்யட்டும்.அதன் பின்பு யோசிப்போம்.

 யாணை சவாரி செய்கிறார்கள்.குதிரை சவாரி செய்கிறார்கள்.குதிரை பந்தையும் நடத்துகிறார்கள்.ஓட்டகத்தின் மேல் சுமையை வைத்து துன்பப் படுத்துகிறார்கள்.ஒட்டக சவாரி செய்கிறார்கள்.

அரசாங்கம் குதிரைப் படை என்ற வகையில் குதிரைகளைத் துன்பப் படுத்துகிறார்கள்.

இவை எல்லாம் உயிர் வதை இல்லையா? தமிழர்களின் ஜல்லிக்கட்டு விழா மட்டும் தான் உயிர் வதையா ? மத்திய அரசும் மாநில அரசும்.நீதி மன்றங்களும் சிந்திக்க வேண்டும்.அறிவு தெளிவு வேண்டும்

எனவே தமிழர்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம்.நம்முடைய உரிமையை எக்காரணம் கொண்டும  விட்டுக் கொடுக்க கூடாது.

துணிந்து ஜல்லிக்கட்டு விழாவை கொண்டாடி மகிழ வேண்டும். இது நமது உரிமை.நமது கலாச்சாரம். இதில் நாம் பின் வாங்கக் கூடாது.
நமக்கு இயற்கை எப்போதும் துணை இருக்கும்.

அன்புடன்
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு