சனி, 7 ஜனவரி, 2017

சன்மார்க்கசங்கத்தவர்களுக்குவேண்டுகோள் !

சன்மார்க்க சங்கத்தார்க்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

மேலே கண்ட பாடலை பொருமையுடன் படித்து அதன் உண்மையைத் தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்ம நேயம் கொண்ட அன்பர்களே உங்கள் தாள் வணங்கி சொல்லுகிறேன் தயவு செய்து கேளுங்கள்.

என் மார்க்கமான சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்கள்.என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுங்கள்.என்னை வைத்து வணங்காதீர்கள்.வழிபாடு செய்யாதீர்கள்.

எல்லாம் வல்ல நமது அருட்பெருஞ்ஜோதி இறைவனையே வணங்குங்கள் வழிபாடு செய்யுங்கள் என்கிறார்.

புன்மார்க்கத்தவர்கள் போல் வேறு சில புகன்ற புந்தி மயக்கம் அடையாதீர் என்கிறார்.

அதாவது அறிவு தெளிவு இல்லாத சமய மத வாதிகள் போல் பைத்தியக்காரத்தனமாம செயல் படாதீர்கள்.

பூரண மெய்ப் பொருளாகிய சுத்த சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே.உண்மைக் கடவுளாக உள்ளார்.அவரையே உண்மை அன்பால் வணங்குங்கள் வழிபாடு செய்யுங்கள் என்று .ஆணை ஆணை என்று சத்தியம் சத்தியம் என்றும்.சொல்லுகின்றார்.

நமக்காகவே மேலே கண்ட பாடலை பதிவு செய்து உள்ளார் நமது அருள் தந்தை வள்ளலார்.

வள்ளலார் சொல்லிய உண்மைகளை எடுத்து சொன்னால் என்னைச் சமய. மத ஈடுபாடு உள்ள சன்மார்க்கிகள் சாடுகிறார்கள் . அதைப்பற்றி எப்போதும் நான் வருத்தப்பட மாட்டேன்.

உண்மை உணர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.பாராட்டுகிறார்கள்.

வள்ளார் சொல்லுவது போல்.வைதாலும் வைதிடுமின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோனேன்.மானம் எலாம் போன வழிவிடுத்தேன்.பொய்தான் ஓர் சிறிது எனினுன் புகல மாட்டேன் .நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே.என்பார்.

நீங்கள் எல்லாம் என்னுடைய ஆன்ம நேய உடன் பிறப்புக்கள்.என்ற உரிமையுடன் சொல்லுகிறேன் எழுதுகிறேன்.  வேறு எந்த லாபத்தைக் கருதியும் அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

வள்ளலார் அடிக்கடி சொல்லுகின்றார்.வழிபாடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பார்.

பொய்யை வழிபடுவதற்கும்.உண்மையை வழிபடுவதற்கும்.வித்தியாசம் என்ன என்பதை சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் அறிந்து கொண்டால்தான் மற்றவர்களுக்கு சுத்த சன்மார்க்கத்தை.உண்மைக் கடவள் யார்? என்பதை உலக மக்களுக்கு விளக்க முடியும்.ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற முடியும்.

நமக்கு காலம் இலை காலம் உள்ளபோதே உண்மையை உணர்ந்து ஒழுக்கமுடன் வாழ்ந்து .மற்றவர்களுக்கும் நல்வழி காட்டுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு