சனி, 7 ஜனவரி, 2017

சாதி.சமயம்.மதம் பற்றுகளை விட வேண்டும்!

நம்முடைய சாதி.சமய.மத பற்றள்ள சன்மார்க்கிகள். மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசி வருகிறார்கள்.  அவற்றைப் பெறுவதற்கு உண்டான வழியைக் காட்டுகிறார்கள் .இது சாத்தியம் ஆகுமா.? அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.

புறப்பற்றை ஒழிக்காமல் அகப்பற்றை எப்படி பற்ற முடியும்.

பற்றிலே முக்கியமானது சாதி சமயம் மதம் என்பதுதான்.விலக்க முடியாத பற்றுகளாகும்.அவைகள் தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான திரைகளாகம்.

அதனால்தான் வள்ளலார் .சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்கின்றார்.

நம்மை பற்றியள்ள பற்றுக்கள் அனைத்தும் .சாதி சமயம் மதத்தின் வழியாகத்தான் வந்துள்ளன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.

அதனால் தான் .சாதியும் சமயமும் மதமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி என்கிறார் வள்ளலார்..

இதில் இருந்து நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்ட சாதி சமய மத பற்றுக்களின் சூட்சமத்தின் உண்மையை அறிந்து கொண்டால்  மரணத்தை வெல்லும் வழியை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.அதுதான் வள்ளலார் சொன்ன உளவாகும்.

உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
 அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி ! என்கிறார்.

பொது உணர்வு உணரும் போதலால் பிரித்தே அது வெனிற் தோன்றா அருட்பெருஞ்ஜோதி.!

 எனவே சாதி சமய மத பற்றுகளை விட்டால் தான் பொது உணர்வு உண்டாகும்.உண்மைகள் விளங்கும்.அருள் பெறும் வழி கிடைக்கும்.மரணத்தை வெல்ல முடியும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு