செவ்வாய், 17 ஜனவரி, 2017

தமிழ் நாட்டை ஆள்வதற்கு வேறு ஆட்களே இல்லையா ?

தமிழ் நாட்டை ஆள்வதற்கு வேறு ஆட்களே இல்லையா?

தன்மானம் உள்ள தமிழர்களே! தமிழ் நாட்டை ஆள்வதற்கு .ரஜினி.தீபா.சசிகலாவை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா ?

இவர்களின் கொள்கைகள் என்ன ? இவர்களின் திறமைகள் என்ன ? இவர்கள் நாட்டு மக்களுக்காக என்ன தியாகம் செய்து உள்ளார்கள்.எத்தனை வருடம் மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைச்சாலை சென்று உள்ளார்கள்.

தமிழகத்தை ஆட்சி செய்ய இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.என்ன கொள்கை உள்ளது.என்ன திறமை உள்ளது என்பதே தெரியாமல் இவர்களை .வாங்க வாங்க என்று அழைக்கின்றீர்களே .அதற்கு என்னக் காரணம்.

உங்களின் அறியாமையை நினைந்து வேதனைப் படுவதா ? வெட்கப் படுவதா ? என்றே தெரிவதில்லை....

நம் நாட்டில் திறமை உள்ளவர்கள.அறிவு ஆற்றல் உள்ளவர்கள்.நாட்டை ஆளும் திறமை உள்ளவர்கள்.மக்களின் மேல் அக்கரை உள்ளவர்கள் .மக்களின் அறியாமையை நீக்கும் கொள்கைப்பாடு  உடையவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

அவர்கள் யாரும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.தெரிந்து கொள்ளும் அறிவு இல்லையா ?

நான் யாரையும் குறைகள் சொல்ல விரும்ப வில்லை.அவரவர்களுக்கேத் தெரியும்.

நல்ல அறிவுடனும் நல்ல சிந்தனையுடனும் செயல் படுங்கள்.

நல்ல ஒழுக்கம் உள்ள .கருணை உள்ள .அக்கரை உள்ள .அறிவு உள்ள.அருள் உள்ள.கொள்கை உள்ள நபரை தேர்வு செய்யுங்கள்.

அப்போதுதான்.நாடும். நாட்டு மக்களும்.நலமுடனும்.ஒழுக்கமுடனும். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

சிந்தித்து செயல் படுங்கள். அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளி எறியாதீர்கள்.

உங்களில் ஒருவன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு