சனி, 7 ஜனவரி, 2017

பகுத்தறிவுஎன்றால்என்ன ?

பகுத்தறிவு என்றால் என்ன?

 மனித வாழ்க்கையில் பழைய மூடநம்பிக்கைக்கு தங்களுடைய  அறிவை செலுத்தாமல்.உண்மை எதுவோ அதை அறிந்து வாழ்வதே பகுத்தறிவு என்பதாகும்.

பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது பைத்தியக் காரத்தனம்.

உலக வரலாற்றில் பகுத்தறிவு என்றால் என்ன ? என்பதை போதித்தவர் வள்ளலார்  ஒருவரே!

வள்ளலார் சொல்லி உள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் " கொள்கைகள் யாவும் பகுத்தறிவுக் கொள்கையாகும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதே பகுத்தறிவாகும்.

எல்லவரும் ஏற்றுக் கொள்ளும் பொது நோக்கம் கொண்ட பொது உடமைக் கொள்கையாகும்.

வள்ளலார் காட்டிய வழியில் வாழ்வதே பகுத்தறிவாகும்.

ஒத்தாரும்.உயர்ந்தாரும்.தாழ்ந்தாரும் எவரும்.  ஒருமையுடன் சமமாக வாழ்வதே. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பகுத்தறிவு கொள்கையாகும் .

அதுவே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  கொள்கையைக் கடைபிடித்து பகுத்தறிவு  கொண்டு வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு