சனி, 7 ஜனவரி, 2017

சமயமதவாதிகள் !

சமய மத வாதிகள் !

வள்ளலார் காலத்தில் .சமய மத வாதிகள்.வள்ளலாரின் கடவுள் கொள்கைகளை வெளியில் இருந்து எதிர்த்து.அருட்பா மறுட்பா  போராட்டங்கள் நடத்தினார்கள்.நீதிமன்றம் வரை சென்று தோல்வி அடைந்தார்கள்.

இப்போது சன்மார்க்கத்தின் உள்ளே நுழைந்து கொண்டு சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கு தடையாக செயல் படுகிறார்கள்.

சைவ சமயத்தை சார்ந்தவர்கள் தான் வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களை இனம் கண்டு களைஎடுக்க வேண்டும்.சுத்த சன்மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்களும்..அவற்றினால் பின் பற்றப்படும்.ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் பற்றாத வண்ணம் இருக்க வேண்டும் என்று வள்ளலார் ஆணையிட்டு உள்ளார்கள்

இப்போது ஆங்காங்கு உள்ள சன்மார்க்க சங்கங்களில் .சமய மத சடங்குகள் போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருகிறார்கள்.

பழம் தேங்காய்.விபூதி.சூடம்.ஊதுவத்தி.மற்றும்  பூமாலை.படையல் வைத்து சமய மத  வழிபாடுகள் போல் செய்து வருகிறார்கள்.

 அவை அனைத்தும் சுத்த சன்மார்க்கதிற்கு நேர் விரோதமான செயல்களாகும்.

அனைத்து சன்மார்க்க சங்கங்களிலும் வள்ளலார் சொல்லிய வண்ணம் அருட்பெருஞ்ஜோதியை மட்டும் வைத்து வழிபாடு செய்து வர வேண்டும்.

ஜோதி முன் அமர்ந்து மெல்லென அருட்பா பாடல்களை பாடி துதி செய்தல் வேண்டும்.

பசித்த ஏழைகளுக்கு அவரவர்களால் முடிந்த அளவிற்கு அன்ன விரையம் செய்ய வேண்டும்.

இவைகளை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தாலே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்ய வேண்டியதை செய்வார்.

எனவே சமய மதம் சாரந்தவர்களை சாராமல்.வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து.ஆன்ம நேயம் கொண்டு உயிர் இரக்கத்தை கடைபிடித்து .வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு