சனி, 7 ஜனவரி, 2017

வணங்குவது ஏன்வழிபடுவதுஏன் ?

[05/01, 11:47 a.m.] aanmaneyan.kathirvelu@gma: வணங்குவது ஏன் ? வழிபடுவது ஏன் ?

வணங்குவது என்பது மரியாதை. நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு வணக்கம் வந்தனம் போன்று செய்கையால் காட்டுவது.

வழிபடுவது என்பது:_ வேண்டுதல். முறையீடு.விண்ப்பம் செய்தல். இவை இறைவனிடம் உணர்வு பூர்வமாக கரணங்கள்.இந்திரியங்கள் மூலமாக செய்தல்.

இதில் வள்ளலார் வழிபடு விஷயத்தில் கவனமாக இருங்கள் என்கின்றார்.

இதில் உருவத்தை வணங்குங்கள்.அருட்பெரும்ஜோதியை வழிபடுங்கள்.என்பதை அறிவுத்தரம் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் உருவ வழிபாடு வேண்டாம் என்றவர் .தன்னுடைய உருவத்தை வழிபடுவதை ஏற்றுக் கொள்வாரா? என்பதை சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் உருவத்தில் இல்லை !

வள்ளலாரை. அருட்பெரும்ஜோதி ஆண்டவர். தன்வசமாக தன்னைப்போல் மாற்றிக் கொண்டது.இதுதான் உண்மை.இதுதான் சத்தியம்.

வள்ளலார் படத்தையோ.உருவத்தையோ.வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை.ஏன் என்றால் அதில் வள்ளலாரும் இல்லை.ஆண்டவரும் இல்லை.அது வெரும் படம் அவ்வளவுதான்.நாம் ஒரு மரியாதைக்காகவும்.பழக்கத்திற்காகவும் வைத்து கொள்ளலாம் அவ்வளவுதான்.

அருட்பெரும்ஜோதியில் வள்ளலார் உள்ளார்!

அருட்பெரும்ஜோதியை வழிப்பட்டால் அதன் உள் வள்ளலார் கலந்து உள்ளார். ஜோதியிலே ஆண்டவரும் உள்ளார் வள்ளலாரும் உள்ளார்.

அதனால் வள்ளலார் சொல்லுகின்றார்.
 ஆதி அந்தமும் இல்லா.அருட்பெரும் ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைக்கின்றேன்.நீவீர் எல்லாம் மேல் ஏறும் வீதி. மற்ற வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி என்கிறார்.

கீழ் செல்வதும் மேல் செல்வதும் உங்கள் விருப்பம்.

மேலும் தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதை வள்ளலாரே சொல்லுகின்றார்.

அருட்ஜோதி ஆனேன் என்று அரையப்பா முரசு.
அருள் ஆட்சி பெற்றேன் என்று அரையப்பா முரசு.
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அரையப்பா முரசு.
மரணம் தவிர்த்தேன் என்று அரையப்பா முரசு! என்று வெற்றி முரசு கொட்டுகின்றார்.

மேலும் :-

என்சாமி எனது துரை என் உயிர் நாயகமே

இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்

பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்

தன் சாதி யுடையப் பெரிய தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே

மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின்தனக்கே

வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

என்பதை தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

அருட்பெரும்ஜோதி வேறு வள்ளலார் வேறு அல்ல. என்பதை அறிவு சார்ந்ந சுத்த சன்மார்க்க அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லாம் இந்த பிறவியில் வள்ளலார் காட்டிய வழியில் செல்வதற்கு கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.....
[05/01, 6:56 p.m.] aanmaneyan.kathirvelu@gma: உங்கள் எல்லோரையும் விட வள்ளலார் மீது அளவு கடந்த பற்று உள்ளவன் நான்.

வள்ளலார் அவர்கள் சொல்லி உள்ளதை மீறாமல் செயல் படுவதுதான் அவருக்கு நாம் செய்யும் நற் பண்பகளாகும். அடிபணியும் செயல்களாகும்.

அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் குரு சிஷயன என்ற பேதம் என்பது கிடையாது.

எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும்.ஒன்றெனக் காண்பதே .வள்ளலார் நமக்கு சொல்லித் தந்த பாடமாகும். அவைதான் ஒருமை என்பதாகும்.அதுதான் சாகாக்கல்விக்கு நம்மை இட்டுச் செல்லும் துவாரமாகும்.

வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கையில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

இவை சொல்லி வருபவை அல்ல .முழுமையான ஜீவகாருண்யத்தால்.அறிவால் அனுபவத்தால்
[05/01, 6:56 p.m.] aanmaneyan.kathirvelu@gma: அறிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு