செவ்வாய், 1 நவம்பர், 2016

பெற்றோர்களே காரணம் !

பெற்றோர்களே காரணம் !  

 குழைந்தை பிறந்ததும் அக்குழந்தையின் வாழ்க்கை பெற்றோர்கள் உடையது . . .

அக்குழந்தைக்கு  உலகின் வாழ்க்கை முறையைப் பற்றி ஏதும் தெரியாது மூட நம்பிக்கையைப் சொல்லியும் ,காட்டியும் வளர்த்து வருகின்றனர் ,அதனால் அக்குழந்தைகள் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுக்காமல் பொய்யானக் கற்பனை கடவுள்களின் ் பின்னால் தள்ளப்படுகின்றார்கள் .

அவர்கள் உண்மையான கடவுள் யார் ? என்று தெரிந்து கொள்வதற்குள் வயது முதிர்ந்து மாண்டு போகின்றார்கள் . . . . ஆன்மீகத்தை பின் பற்றுபவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை . . .

ஆன்மீகம் என்றாலே இன்றைய  வாலிபர்கள் வெறுப்பு உடையவர்களாக இருக்கின்றார்கள் .   அதற்கு காரணம் ,உண்மையான கடவுள் கொள்கை இல்லாமையே !  வள்ளலார் வந்த பின்தான் மக்கள் சிந்தித்து தெளிவு அடைய  ஆர்வம் காட்டுகிறார்கள் .அவர்களை தெளிவு அடைய வைப்பதற்கும் பழைய ஆன்மீக வாதிகள் தடையாக உள்ளார்கள் ..பழைய ஆன்மீக வாதி என்பவர்கள்  . . சன்மார்க்கத்தில் உள்ள சமய மத கொள்கை உடையவர்கள் .அவர்கள் தான்  இளைய சமுதாயத்தை குழப்பிக் கொண்டு உள்ளவர்கள் .் சன்மார்க்க வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்களும் அவர்களே !  வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் .சமய மதக் கொள்கைகளை ,சன்மார்க்கத்தில் இணைத்து குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டும்  உள்ளார்கள் .

இன்றைய இளைஞர்களை பெரியவர்கள் தயவுசெய்து விட்டு விடுங்கள் .அவர்களே உண்மையைத் தேடி வந்து விடுவார்கள் .பழைய குப்பைகளை அவர்கள் மனதிலே கொட்டாதீர்கள் .இன்றைய இளைஞர்கள் எல்லோரும் அறிவாளிகள் .அவர்களின்  பெற்றோர்கள் தான் உண்மையை அறிந்து கொள்ள தடையாக இருக்கின்றார்கள் .    .

 அவற்றையும் தாண்டி மக்கள் சன்மார்க்கத்திற்கு வந்து கொண்டு உள்ளார்கள் ...ஏன் என்றால் ? இது சன்மார்க்க காலம் எனவே  எவ்விதப்பட்ட தடைகளும் அகற்றப் பட்டு விடும் .சாதி சமய மதங்கள் கடந்தது வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் .     . . . இன்றைய இளைஞர்கள் உண்மையை அறிந்து கொண்டு நல் வாழ்வு வாழ்வதற்க சமய மத பற்று உள்ள  பெற்றோர்கள் ஒதுங்கிக் கொள்வது மிகவும் நல்லது .

இனி வரும் காலம் நல்லவையாகவே நடக்கும் .  

 அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு