செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நாம் வணங்கும் தெய்வங்கள்!

நாம் வணங்கும் தெய்வங்கள்!
நாம் பிறந்ததில் இருந்து பேசாத தெய்வங்களையே வழிபாடு செய்கின்றோம்..அவற்றிற்குப் உணவைப் படைக்கின்றோம்.
அந்த தெய்வங்கள் மக்களுக்கு என்ன செய்து கொண்டு உள்ளது என்பதே தெரியாமல்.அறியாமையில் அலைந்து கொண்டு பொருளை அழித்துக் கொண்டு உள்ளோம்.
இந்த உலகில் பேசும் தெயவங்கள் நிறைய உள்ளன.அவர்கள் தான் மனித உயிர்கள் மனித தெயவங்கள்,.அவர்கள் பட்டினி,பசி,வறுமை,ஏழ்மை பிணி போன்ற துன்பங்களில் வாடி வதைந்து கொண்டு உள்ளார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அதுதான் கடவுள் வழிபாடாகும் என்கின்றார் வடலூர் வள்ளலார்..
பேசாத கல்,மண்,வெள்ளி,தங்கம்,போன்ற பேசாத பொம்மை தெய்வங்களுக்கு கொண்டு போய் பொருள்களைக் கொட்டுகிறீர்கள்.,எந்த தெய்வமாவது அவற்றை பெற்றுக் கொள்கிறதா? படையல் படைக்கின்றீர்கள் ,எந்த தெய்வமாவது அவற்றை உன்னுகின்றதா ? சிந்திக்க வேண்டும்.
பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பதே கடவுள் வழிபாடு என்றார்.,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்கின்றார்/
உங்கள் குடும்பத்தில் உள்ள துன்பங்கள், துயரங்கள்,அச்சம்,பயம்,பிணி, போன்ற தீராத பிரச்சனைகள் உண்டானால்,அவற்றைத் தீர்க்கும் ஒரே வழி தான் ,ஜீவ காருண்யம் என்னும் பசிப்பிணியைப் போக்குவதாகும்..
பேசாத தெய்வங்களுக்கு கொண்டு போய் கொட்டுவதால் எந்தபயனும் இல்லை.பேசும் தெயவங்களின் வயிற்றில் கொட்டுங்கள்.உங்களின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடும்..
இதை நான் சொல்லவில்லை, வள்ளலார் சொல்லுகின்றார்.கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கின்றார்.என்பதை முற்றும் அறிந்த அருளாளர்,மரணத்தை வென்ற வள்ளலார் ,கடவுள் நிலை அறிந்து அம் மயம் ஆனவர் சொல்லுகின்றார்.
எங்கே கருணை உள்ளதோ அங்கே அருள் உண்டாகும்.அந்த அருள்தான் உங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும்.
சிந்திப்பீர் செயல்படுவீர்..
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு