செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சமயங்கள் மதங்கள் !

சமயங்கள் மதங்கள் !
எல்லா சமயங்களும் மதங்களும் மக்களுக்கு நல்லது தான் சொல்ல தோன்றியது .
ஆனால் மனித உயிர்களை பிரித்து விட்டது .ஆன்ம நேயத்தை அழித்து விட்டது .
இன்று உலகில் நடக்கும் போட்டி, பொறாமை ,வஞ்சகம் ,சூது ,எல்லைத் தகராறு ,தீவிர வாதம் ,பயங்கரவாதம் ,போன்ற தீய செயல்கள் அனைத்திற்கும் சமயங்களும் மதங்களுமே காரண காரியமாக உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை .
மனித இனத்தை தொழில் ரீதியாக சாதியை பிரித்து வேறு படுத்தி ஒற்றுமையை குகுலைத்தது .
சாதி சமய மதங்களின் குற்றங்களை இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம் .
வள்ளலார் வந்து தான் சாதி சமயம் மதங்கள் செய்த குற்றங்களை தெளிவாக விளக்கி உள்ளார் .
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !
எங்குலம் எம் இனம் என்பது தொண்ணூற்று ஆறு அங்குலம் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி !
சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி !
என்று ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் ,
மேலும்
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !
என்று இந்து மதத்தை மட்டும் அல்ல .உலகில் உள்ள எல்லா மதங்களையும் சாடுகின்றார .
மேலும் கடவுளை வணங்குவதற்கும் நேசிப்பதற்கும் .அருளைப் பெறுவதற்கும் .சாதி சமயம் மதங்கள் தான் முக்கிய தடையாக உள்ளன .
சாதி சமய மதப் பற்று உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் இறைவன் தொடர்பு சத்தியமாக கிடைக்காது
என்பதை அறிவு உள்ளவர்கள் அறிந்து புரிந்து தெரிந்து கொண்டால் நல்லது .
இது சாதி சமய மதங்களை சாடுவது இல்லை .அதனால் உண்டாகும் தீமைகளை எடுத்து உரைப்பதாகும் .
நாம் எல்லோரும் இறைவன் குழந்தைகள் .ஆன்ம நேயம் எப்போதும் விளகி விடக்கூடாது
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு