வியாழன், 28 ஜூலை, 2016

சத்விசாரம் என்றால் என்ன ?

சத்விசாரம் என்றால் என்ன ?

வள்ளலார் பேருபதேசம் என்ற பகுதியில் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.வள்ளலார் ஆண்டவர்  கட்டளைப் படி இறுதியாக மக்களுக்கு அறிவித்த உண்மை செய்திதான் பேருபதேசம் என்பதாகும்.

வள்ளலார் முதலில் சொல்லிய வாசகம் மிகவும் அழுத்தமானது ! நாம் அனைவரும் அந்த வாசகம் எவ்வளவு முக்கியமானது என்று இடைவிடாது படித்து சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் சொல்லியது !

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள். என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்லுகின்றார்.

ஏன் இதை சொல்லுகின்றேன் என்றால் ...ஆண்டவர் வருகின்ற தருணம் அதனால் உங்கள் அனைவருக்கும் உண்மையையைச்  சொல்லுகின்றேன் எனவே இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள் என்பது பொருளாகும்.

ஆண்டவர் வருகின்ற தருணத்தை நேரத்தை  வள்ளலார் இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முன் கூட்டியே சொல்லியதால்,ஆண்டவர் வருகின்ற போது  நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரத்தையும் விளக்கத்தையும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகிற --பத்துத் தினமாகிய கொஞ்சம் காலம் --வரையில் .நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் .

இதே செய்தியை சமரச சுத்த சன்மார்க்க சத்திய   ''ஞானசபை'' விளக்கப் பத்திரிகையில் தெரியப் படுத்துகின்றார் .

ஞான சபையை கட்டி முடித்தவுடன் ஞான சபையின் சட்டதிட்டங்களை வகுத்து எழுதி தெரியப் படுத்துகின்றார் ...

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''  என்றும் .சாலைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ''என்றும்,சங்கத்திற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''பெயர் வழங்குதல் வேண்டும் என்று பெயர் மாற்றம் செய்கின்றார் ..

அதன் பின்பு இன்று தொடங்கி ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்,ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் ,பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம் ,மேலே ஏற்றுகிற ''குளோப்''முதலிய விளக்குகளும் வேண்டாம் ,தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேக சுத்தி ,கரண சுத்தி உடையவர்களாய் ..''திரு வாயிற் படிப் புறத்தில் ''இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது,எழுபத்திரண்டு வயதுக்கு மேற் பட்ட பெரியவர் கையில் கொடுத்தாவது ,''உட்புற வாயில் களுக்குச் சமீபத்தில் வைத்து வரச் செய்விக்க வேண்டும் என்கின்றார்.

அதன் உண்மை விளக்கம் என்ன ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஞான சபைக்கு உள்ளே மத்தியில் விளக்கு வைக்க சொல்ல வில்லை .அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும் ..வாயிற்படி புறத்தில் விளக்கு வைக்க வேண்டும் என்று  சொன்னார்,அப்போது இருந்த தொண்டர்களுக்கு ஏன் ? எதற்க்காக வள்ளலார் அப்படி  சொன்னார் என்பதை  புரிந்து கொள்ளும் அனுபவம் இல்லாது இருந்தது.

அதனால் சத்திய ஞான சபையை பூட்டிக் கொண்டு சித்திவளாகம் சென்று விடுகின்றார் .

( வள்ளலாருக்கு ஆண்டவர் அறிவித்த வண்ணம் ஞான சபையில் வள்ளலார் உட் சென்று கதவை தாளிட்டுக் கொள்ள சொல்லி சித்திப் பெற்று இருக்க வேண்டும் .ஆனால் எல்லாமே மாற்றப் பட்டு விட்டது ).

பேருபதேசத்தில் என்ன சொல்லுகின்றார் ''இது முதல் ஆண்டவர்  சாலைக்கு போகிற'' --பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் --வரையில் நீங்கள் எல்லாவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் .

அந்த விசாரணை எது என்றால் ;--

நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது ? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெயவத்தின் உடைய நிலை எப்படிப் பட்டது ? என்று விசாரிக்க வேண்டியது.அதற்குத் தக்கபடி நீங்கள் ஒருமித்தாவது அல்லது  தனித்தனியாகவாவது ,உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது ---வேலாயுதனார் அவர்களை கேட்டால் மனுஷிய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் --அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையில் இருங்கள் என்று சொல்லுகின்றார் .

வள்ளலாரின் முதல் சீடரான வேலாயுதம் அவர்கள் மனித தரத்தில் சொல்லுவார் என்று சொல்லுகின்றார் .அப்படி  சொல்லுவதின் அர்த்தம் என்ன ? வேலையும் அவர்களுக்கு வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கம் என்னவென்று அவருக்குத் தெரியாது  என்பது பொருளாகும்..ஏன் என்றால் வள்ளலார் உடன் இருந்தும் அவர் சமய மதக் கொள்கைகளை விட்டு வெளியே வரவில்லை என்று வள்ளலார் வருத்தப் படுகின்றார்..

ஓர் இடத்தில் வேலாயுதம் அவர்களும் கை விட்டு விட்டார் என்று வேதனைப் படுகின்றார் வள்ளலார் .....  இருந்தாலும் மனித தரத்தில் சொல்லுவார் என்கின்றார் .மனித தரம் என்பது ''இம்மை இன்ப வாழ்வு'' என்பதாகும்.அதற்குமேல் அவருக்கு அருள் விளக்கம் என்ன என்பது தெரியாது  என்பது பொருளாகும்.

இப்போது சுத்த சன்மார்க்கம் என்ன என்பது தெரிந்த அளவிற்கு அப்போது வள்ளலார் உடன் இருந்தவர்களுக்கு சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பது யாருக்குமே தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.வள்ளலார் உடன் இருந்தவர்கள் அனைவருமே சமயம் ,மதம்,சார்ந்த வர்களாகவே இருந்தார்கள்.

வள்ளலார் உடன் இருந்தவர்கள் அவருடைய சித்து விளையாட்டுகளைத் தெரிந்து கொள்வதற்கும்,அவரால் ஏதாவது பொருள் லாபம் கிடைக்கும் என்றே அவரை சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.அருளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ ,மரணத்தை வெல்லும் வழியைப் பற்றியோ தெரிந்து கொள்ள எவரும் முன் வரவில்லை. அதை நினைத்து வள்ளலார் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தார் என்பது உண்மை ...

இருந்தாலும் வள்ளலார் சொல்ல வேண்டியதை சொல்லிக் கொண்டே இருந்தார் என்பது உண்மையிலும் உண்மை .

எனவே தான் நீங்கள் உண்மையை அறிந்து கொள்ள ஒருமித்தாவது தனித் தனியாகவாவது நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்கின்றார் ..

சத் விசாரணை முகத்தில் இருந்தால்,நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் ,மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.அந்த பசுமை வர்ணம் எப்படிப் பட்டது என்றால் .

கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது .இப்படிப் பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என '' தோத்திரித்தும் ,தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும்,இவ் வண்ணமாக இருக்கின்ற போதும்,படுக்கின்ற போதும் ,இடைவிடாதும்,இவ் விசாரத்தோடும்,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால்,தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் ...

அவ் விசாரம் --பரம் ,அபரம்,என்று இரண்டு வகையாக இருக்கின்றது. இவற்றில் 1, பரம் --பரலோக விசாரம் . 2,அபரம் -இக லோக விசாரம் . இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரம் அல்ல ...

தொடரும் ......


தொடர்ச்சி ...2, ஆம் பாகம் !

சத் விசாரம் என்றால் என்ன ?

விசாரணையில்  பரம் ,அபரம், என்று இரண்டு வகையாக இருக்கின்றது.இவற்றில் பரம் --பரலோக விசாரம்,....அபரம் --இகலோக விசாரம் என்ற இரண்டு விசாரணையில் இகலோக விசாரம் என்பது விசாரம் அல்ல என்றும் , பரலோக விசாரமே உண்மையான விசாரம் என்றும் மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் ..

அதற்கு வள்ளலார் சொல்லும் விளக்கம் !

சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டு இருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரம் ஆகாது.அது  உண்மை விசாரமும் அல்ல ,என்கின்றார் .

ஏன் என்றால் ;--விசாரம் என்பதற்குப் பொருள் ;--வி --சாரம் என்பதில் ,வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது ...அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும்.பொருட்டு வந்தது.மேலும் ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல் ,நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடி இருக்கின்ற பச்சைத் திரையாகிய இராகாதிகளை ,விசார அதி உஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது .

தவத்தினால் கிடைக்கும் உஷ்ணம் வேறு ! ஆண்டவரை இடைவிடாது தோத்திரம் செய்வதாலும்,நினைப்பதாலும் கிடைக்கும் உஷ்ணம் வேறு என்பதை  பிரிக்கின்றார் வள்ளலார் .!

அந்த உஷ்ணம் யோகியின் உடைய அனுபவத்தில் தெரியும்.,அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது .

அந்த விசாரத்தை விட ''ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும் ,தெய்வத்தை நினைக்கின்றதிலும்,அதிக உஷ்ணம் உண்டாகும்'' என்கின்றார் .மேலும் யோகிகள் வனம்,மலை,முழை,அதாவது குகைகளில் போய் நூறு,....ஆயிரம்,,,,முதலிய வருஷ காலம்,தவம் செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும்,..நினைக்கின்றதிலும் --இதைவிடக் கோடி கோடிபங்கு பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் ..

அந்த உஷ்ணம் எப்படி உண்டாகும் என்பது எவ்வாறெனில் ;--ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரம் இல்லாமல் பர விசாரிப்பும்,அத்துடன் ஆன்ம நெகிழ்ச்சியுடன் தெயவத்தைச் சிந்தித்துக் கொண்டாவது ,அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் ,பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் .ஆதலால் இவ் வுலகில் வி-- சாரம் என்கின்ற உண்மை தெரியாது விசாரம் என்று வழங்கி ,அதை துக்கம் என்றே சொல்லுவார்கள் .நாம் அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது .

வள்ளலார் விசாரத்தை இரண்டாகப் பிரிக்கின்றார் .''விசாரம்''என்பது வேறு .. ''சத்விசாரம்'' என்பது வேறு , சாதாரண விசாரம் என்பது ,துக்கம்
( துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம்  ) என்பதாகும்...சத்விசாரம் என்பது துக்கம் நிவர்த்தி ,(அதாவது துன்பம்,துயரம்,அச்சம,பயம்,மரணம்  இல்லாமல் வாழ்வது ) என்பதாகும்.

மேலும் வள்ளலார் சொல்லியது;--அவர்கள் என்பது ...,சமய மத வாதிகள் பண்ணுகின்றது --துக்கமே விசாரம் என்று சொல்லுகின்றார்கள் .அது தப்பு ; சாரம் என்றால் துக்க நிவர்த்தி ,வி,உபசர்க்கம் ,,சாரம் என்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி,என்பதாகும்.ஆதலால் விசாரம் என்கின்றது ..முன் குறித்தபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது.

ஆதலால் நாம் இடைவிடாது விசார வசத்தராய் இருக்க வேண்டும்.மேலும் ,வி --சாரம் என்பது ;--வி-விபத்து சாரம்,---நீக்குதல் ,நடத்தல்,ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியின் கண் ...பயிலுதல் வேண்டும் என்று மக்களுக்கு போதிக்கின்றார் வள்ளலார் .

அப்படி வள்ளலார் சொல்லியும் யாரும் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்க வில்லை என்பதே வருத்தமான செய்தியாகும்.

மேலும் ஆண்டவரை நினைக்கின்றதிலும்,தோத்திரம் செய்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும் என்கின்றார் வள்ளலார் .வள்ளலார் சொல்லிய உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது மக்களுக்கு புரியவில்லை விளங்கவில்லை. இன்னும் அப்படித்தான் சில சன்மார்க்கிகள் உண்மைத் தெரியாமல் இருக்கின்றார்கள் .

''பேருபதேசம்'' வெளியிடுவதற்கு,இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னாடியே கடவுள் உண்மையை வெளிப் படுத்துகின்றார்.!

வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவதற்கு முன்னாடியே! எதற்க்காக ?ஞான சபையை நிறுவுகிறேன் என்ற உண்மையை மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

மெய் மொழியும் ஒழுக்கமும் !

மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் வள்ளலார்  எழுதி வெளியிட்ட உண்மையை சுத்த சன்மார்க்கிகள் ஒவ்வொருவரும் பல முறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.அவ்வளவு பெரிய  உண்மைக் கருத்துக்களை வெளிப் படுத்தி உள்ளார் ..

தயவு செய்து பொறுமையாக படித்து பாருங்கள்.!

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும்,ஒழுக வேண்டுவதும் யாதெனில் ;----

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்...
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்கின்றவர் என்றும்.
இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்.

எல்லா அண்டங்களையும் ,..எல்லா உலகங்களையும் ,...எல்லாப் பதங்களையும்...எல்லாச்சத்திகளையும்,,,,,எல்லாச் சத்தர்களையும்,,,எல்லாக்  கலைகளையும்,,,எல்லாப்  பொருள்களையும்,,,,எல்லா தத்துவங்களையும்,,,எல்லாத்  தத்துவிகளையும் ....எல்லா  உயிர்களையும்....எல்லாச் செயலகளையும்...எல்லா இச்சைகளையும்,,,எல்லா ஞானங்களையும்,,,எல்லாப்  பயன்களையும்,,,எல்லா அனுபவங்களையும்,,,மற்றை எல்லா  வற்றையும் ,,,

தமது திருவருள் சத்தியால் ;--1, தோற்றுவித்தல் ...2,.வாழ்வித்தல் ,,,3,குற்றம் நீக்குவித்தல் ,,,,4,பக்குவம் வருவித்தல்,,,5,விளக்கஞ் செய்வித்தல் .. என்னும் ஐந்து தொழில்கள் முதலிய பெருங்  கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,,..எல்லாம் ஆனவர் என்றும் ,,..ஒன்றும் அல்லாதவர் என்றும்....சர்வ காருண்யர் என்றும்...சர்வ வல்லபர் என்றும் ...

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெரும் தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும் --சத்திய அறிவால் அறியப்  படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' அகம் ,புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு ''என்னும் பூரணப் பொது வெளியில் ,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

உண்மைக் கடவுள் யார் ? அவர்  எங்கு உள்ளார் ? அவர் செயல்கள் என்ன ? அவர் பெயர் என்ன ? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவரிடம் அருளைப் எவ்வாறுப் பெறுவது ? மரணம் இல்லாப் பெரு வாழ்வை எவ்வாறு அடைவது ?  பேரின்ப  சித்தி பெருவாழ்வு எப்படிப் பெறுவது ? ஒழுக்கம் என்றால் என்ன ?  என்பதை  எல்லாம் விளக்கமாக  சொல்லியும்,சொல்லியபடி வாழ்ந்தும் காட்டி உள்ளார் நமது வள்ளல்பெருமான் ...


தொடரும் ;---

மேலும் வள்ளலார் சொல்லியது ;--  


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு