புதன், 27 ஜூலை, 2016

வள்ளல்பெருமான் ஏன் வந்தார் ?

வள்ளல்பெருமான் ஏன் வந்தார் ?

வள்ளலார் தானாக இந்த உலகத்திற்கு வரவில்லை..தந்தை தாய் உறவால் வரவில்லை உண்மையான .இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரே சொல்லுகின்றார் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கின்றார் ,அதற்கு அர்த்தம் என்ன ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,மனிதர்கள் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் அவர்களை சமயங்களும் மதங்களும் தவறான வழிகளைக் காட்டியதால் உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் ,அகம் கருத்து புறம் வெளுத்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டுதான் வள்ளல்பெருமானை இந்த உலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  அனுப்பி வைத்துள்ளார் .

 மனிதர்கள் இந்த பிறவியிலே இந்த உலகத்திலே  பரத்தை பெற வேண்டும் என்பதுதான் சுத்த சன்மார்க்க கொள்கைகயாகும் .அதாவது மரணத்தை வென்றால் மட்டுமே இறைவன் இருக்கும் இடமான பரத்திற்கு செல்ல முடியும் .அங்குதான் இறைவன் இருக்கின்றார் .

அதாவது பரம் என்றால் பரவெளி என்பதாகும்.அருள் வெளி என்பதாகும்.அருட் பெருவெளி என்பதாகும்,அதுவே தனி இயற்கை உண்மை வெளியாகும்.அதுவே திருச்சிற்றம்பலம் என்பதாகும்...அங்கு இருந்துதான் ஆன்மாக்கள் எல்லாம் இந்த பஞ்ச பூத  உலகத்திற்கு இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வண்ணமிகு பூத வெளி பகுதி வெளி முதலாய்
வகுக்கும் அடி வெளிகள் எல்லாம் வயங்கு வெளியாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்த பரவேளியாகி இயல் உபய வெளியாய்
அன்னுறு சிற்பர வெளியாத் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெரு வெளியாகி அருள் இன்ப வெளியாய்த்
திண்ணம் உறும் தனி இயற்கை உண்மை வெளியான
திருச் சிற்றம்பலம் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் !

அந்த தனி இயற்கை உண்மை அருள்  வெளியான திருச் சிற்றம்பலத்தில் இருந்துதான் இங்கு வந்து உள்ளோம்.

இங்கு வந்த ஆன்மாக்கள் உயிர், உடம்பு எடுத்து வாழ்ந்து கொண்டு உள்ளன .வாழ்க்கை முடிந்தவுடன் திரும்பவும் எங்கு இருந்து வந்ததோமோ ,அங்கே செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை .இறைவன் ஆணை யாகும்.

இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட திரும்பவும் செல்லவில்லை .ஏன் செல்லவில்லை என்றால் ,,ஆன்மா எப்படி வந்ததோ அப்படி சென்றால் தான் இறைவன் ஏற்றுக் கொள்வார் .

உயிரும் உடம்பும் எடுத்து வாழ்ந்த ஆன்மா ,உயிரையும்,உடம்பையும், அழித்துவிட்டு செல்ல முடியாது .உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் திரும்ப மாயையிடம் ஒப்படைத்தால் மட்டுமே பரத்திற்கு செல்ல முடியும்..

ஏன் மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.? மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உயிர் உடம்பாகும்..பஞ்ச பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட அழகான வீடுதான் மனித உடம்பாகும்.அந்த வீட்டை அழிக்காமல் அணு ஒளித் துகள்களாக மாற்ற வேண்டும்.அப்படி மாற்றி மாயை இடம் ஒப்படைத்தால் மட்டுமே,ஆன்மா பரலோகத்திற்கு   திரும்பச் செல்ல முடியும். வேறு குறுக்கு  வழியால் செல்ல முடியாது என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ...

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.என்பதுதான் சுத்த சன்மார்க்கம் சொல்லும் மரணம் இல்லாப் பெரு வாழ்வாகும்.

அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்,பேரின்ப பெரு வாழ்வு என்பதாகும்.பேரின்ப லாபம் என்பதாகும்.அந்த தேகத்திற்குப் பெயர்தான் சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்...

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டுவது !

தோல் ,நரம்பு,எலும்பு ,சதை,இரத்தம்,சுக்கிலம்,முதலிய அசுத்த பூத காரியங்களும்,அவற்றின் காரணங்களும் ஆகிய பிரகிருதி அணுக்களும் ஆகிய தேகத்தை,மாற்றி,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய ''சுத்த பூத காரிய சுத்த தேகத்தையும்'',''பொன் வடிவாகத் தோற்றுதல்,மாத்திரமே அன்றி ஆகாயம் போல் பரிசிக்கபடாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்''',''தோன்றப் படுதலும் இன்றி  ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்''

என்று வள்ளலார் தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார் .

மரணத்தை வென்று வாழ்வதற்கு வள்ளலார் சொல்லி உள்ளது ..''ஒழுக்கம் மட்டுமே'' அந்த ஒழுக்கம் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவ காருண்யம் ஒழுக்கம் என்றால் உயிரைக் காப்பாற்றும் ஒழுக்கம் .மற்ற உயிர்களைக் காப்பாற்றும் போது நம்முடைய உயிர் பாது காக்கப் படும்.

அதற்குப் பெயர்தான் ,இந்திரிய ஒழுக்கம் ,,,கரண ஒழுக்கம்,...ஜீவ ஒழுக்கம் ,,,ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.  .

இந்திரிய ஒழுக்கம் என்பது பரோபகாரம் ....கரண ஒழுக்கம் என்பது சத்விசாரம் என்பதாகும்.இந்த இரண்டு ஒழுக்கங்களும் முற்றுப் பெற்றால் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் தானே செயல்படும்...

ஆன்மநேய உடன் பிறப்புகளே வள்ளல்பெருமான் சொல்லிய உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை சிரமேற் கொண்டு வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிக் காட்டுங்கள் .செயல்படுங்கள் .

இதுவே எனது பணிவான வேண்டுகோள் ....

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு