சனி, 30 ஜூலை, 2016

மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் !

மரணம் அடைவதற்கு முக்கிய காரணம் !

மரணம் அடைவதற்கு முக்கிய உண்மையான காரணம் என்னவென்று  தெரியாமல்,சமயங்கள் மதங்கள்,விஞ்ஞானம்,அறிவியல்கள் போன்ற கண்டுபிடிப்புக்கள்  யாவும்    கண்டபடி உளறிக் கொண்டு உள்ளார்கள் .

மரணத்தை தடுக்க முடியாதலால் மரணம் என்பது  இயற்கை என்று  சொல்லி மக்களை நம்ப  வைத்து விட்டார்கள். ..மரணம் என்பது இயற்கை அல்ல ,மரணம் என்பது செயற்கையால் தான் வருகின்றது என்ற உண்மையைக் கண்டு பிடித்தவர் தான் ஆன்மீக பூரண அருள் பெற்ற  அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறவியால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.,வேறு எந்த பிறவியாலும் மரணத்தை வெல்ல முடியாது..அதனால்தான் மனிதப் பிறப்பு என்பது எல்லா பிறப்புகளிலும் உயர்ந்த பிறப்பு என்று சொல்லப் படுகின்றது.உயர்ந்த அறிவு உள்ள பிறப்பும் மனிதப் பிறப்பே யாகும்.

சமய மதம் பொய்யானது !

சமாதி அடைவதும்,முத்தி அடைவதும் உயர்ந்த வாழ்க்கை என்றும், ,ஆன்மா அழியாதது   உடம்பு அழிந்துவிடும் ,,ஆன்மா .சொர்க்கம்,கைலாயம், வைகுண்டம்,பரலோகம்  நரகம் போன்ற இடங்களுக்கு ஆன்மா சென்று விடும் என்பது சமய மதக் கொள்கைகளாகும்.அத்தனையும் பொய்யான கற்பனைக் கதைகளாகும்.

மனிதன் (ஆன்மா ) சமாதி அடைந்தாலும்,முத்தி அடைந்தாலும் ,மறுபடியும் ஆன்மாவிற்கு  பிறப்பு உண்டு என்பதை வள்ளலார் ஆதாரத்துடன் தெரியப் படுத்தி உள்ளார் .

உண்மையான கடவுள் யார் ? என்பதே தெரியாமல் பொய்யான கற்பனைக் கடவுள்களைச்  சமயங்களும்,மதங்களும் படைத்து உள்ளன,என்பதை வள்ளலார் வெளிப் படுத்தி உ;ள்ளார் ..

திருஅருட்பா அனுபவமாலை 87,வது பாடல்

எவ்வுலகில் எவ் எவர்க்கும் அருட்பெருஞ்ஜோதியரே
இறைவர் எனபது அறியாதே இம் மதவாதிகள்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றாய் என்றாய்
ஞான நடங் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே
சேர்ந்தேன் அத் தீ மொழியும் தேமொழி ஆயினவே !

என்று பதிவு செய்துள்ளார் ....குருடர்கள் யானையைக் கண்ட கதைப்போல்  சமயங்களும் ,மதங்களும் பொய்யானக் கற்பனைக்  கடவுள்களை  இந்த உலகத்தில்  அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .அதனால் மக்கள் உண்மை என்னவென்று தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அருள் பெரும் வழியே சுத்த சன்மார்க்கம் !

மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் என்னும் திரவம் வேண்டும்,அந்த அருளைக் கொடுக்க கூடிய ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்னும் அருள் ஒளியாகும். அந்த ஒளிதான் உலகில் உள்ள எல்லா வற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்து கொண்டு உள்ளவராகும்.

அந்த உண்மைக் கடவுளைத்  தொடர்பு கொண்டால் மட்டுமே,அருள் பெரும் வழி கிடைக்கும்.அருள் பெற்றால் மட்டுமே  மரணத்தை வெல்ல முடியும்.அந்த மெய்ப் பொருளை  தொடர்பு கொள்ள தடையாக இருப்பதுவே  சமய மதம் போன்ற தவறான கொள்கைகள் ஆகும்....சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கொள்கைகளை விட்டு வெளியே வந்தால்தான் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள முடியும் ....

தொடரும் ;--

இது வரையில் நாம் உடம்பு எடுத்த வழியும்,உயிர் எடுத்த வழியும்,ஆன்மா வந்த வழியும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்கு தற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி  துறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீரே ஏழை உலகீரே
நடம் புரி என்  தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

உடம்பு வந்த வழியும் ,உயிர் வந்த வழியும் தெரியாமல் ,தினமும் வயிறு புடைக்க உண்டுவிட்டு உறங்கிவிட்டு ,எழுந்து ,குரங்கு மனம் போன போக்கில் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.மனத்தை அடக்கும் வழியைக் கற்றுக் கொள்ளாமல்,இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் மரணம் வந்து சென்று விடுகின்றீர்கள் .

தொடரும் ;--

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு