புதன், 10 ஆகஸ்ட், 2016

மகா ஆத்மாக்கள் !

மகா ஆத்மாக்கள் !

இந்த உலகத்தில் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைவாக ''மகா ஆத்மாக்கள் '' நிறை பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகா ஆத்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று பல நல்ல காரியங்களை மறைமுகமாகச் செய்து கொண்டு வருகின்றார்கள் ..

அவர்களின் தூண்டுதலால் ,அவர்களுடைய ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டில் பல நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் .

அவர்கள் மறைந்தாலும் அடுத்து புதிய ஆத்மாக்கள்  வந்து கொண்டே இருப்பார்கள்.எனவே மக்கள் எதையும் நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கு பக்குவம் கொடுத்து அவர்களைத் தனித்து நின்று,மக்களுக்கு நன்மையைக் காட்டி  செயல்பட வைப்பதுதான் ''இறை அருள்'' ஆற்றலின் வேலைகளாகும்.

ஆனால் அந்த மனிதர்கள் தன்னுடைய அறிவு ஆற்றலும்,திறமையும் எதனால் வந்தது என்று தெரியாமல்,சொல்லத் தெரியாமல்,மக்களுக்கு போதிக்காமல் மரணம் அடைந்து மறைந்து போகின்றார்கள்.

மகா ஆத்மா காந்தி !

அந்த உண்மையைத் தெரிந்தவர் யார் என்றால் ? நமது நாட்டிலே பிறந்து வாழ்ந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள்.

அவர் சொல்லுவார் ,நான் எதை செய்தாலும் என்னுடைய ''ஆத்மா'' எதை செய்யச் சொல்லுகின்றதோ அதைத்தான் செய்வேன் என்பார் .அதனால்தான் அவருக்கு சாதாரண ஆத்மா என்று பெயர சொல்லாமல் ''மகா ஆத்மா'' என்று பெயர் வந்தது .

அதே ஆத்மா எல்லா உடம்பிலும் உள்ளது.

எனவே மனிதர்களாக பிறவி எடுத்த நாம் மனிதர்களை பின் தொடராமல் உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவேண்டும்.ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

அந்த உண்மையான இறைவன் யார் ?>என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்.

அந்த இறைவன்தான் ;--''அருட்பெருஞ்ஜோதி'' என்பதாகும் அந்த ஜோதியின் தனிப் பெருங் கருணையால்தான் உந்த உலகமும் ,உலகில் உள்ள பொருள்களும் ,ஆன்மாக்களும் அதனால் தோன்றும் உயிர்களும் வாழ்ந்து கொண்டு உள்ளன் .

நாம் தொடர்பு கொள்ள வேண்டியது;--தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மைத் தாங்கிக் கொண்டு உள்ள இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளிதான் சிற்று அணு வடிவமாக நம்முடைய தலைப்பாகத்தில் உள் ஒளியாக இருந்து,நம்முடைய உயிரையும் உடம்பையும்,இயங்க வைத்து  இயக்கிச் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் உண்மையான தெய்வம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே 
நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 
.நீதி கொண்டு உரைத்தேன் நீவீர் மேலே ஏறும் வீதி 
மற்றைய வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி !
 .
.என்பதை உணர்ந்து சன்மார்க்க வீதியில் சென்றால் நமக்கு அருள் அனுபவம் கிடைக்கும் ,,என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .
உண்மையை  மக்களுக்கு பறை சாற்றி உள்ளார் .
தேடுங்கள் தேடுங்கள் உள்ளே தேடுங்கள் மகா ஆத்மாக்களாக மாறுங்கள்..எல்லாம் அருள் ஆற்றலும்  கிடைக்கும்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் 
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருள் சுகம் ஒன்றே அரும் பெறல் பெருஞ் சுகம் 
மருட் சுகம் பிற என் வகுத்த மெய்ச்சிவமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு