சனி, 2 ஜனவரி, 2016

பேஸ்புக் நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் !

பேஸ்புக் நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் !

2015,ஆம் கடந்து 2016,ஆம் ஆண்டு புதிய புத்தாண்டாக வந்துள்ளது.

இந்த ஆண்டு எந்த ஆண்டும் தர இயலாத மகிழ்ச்சியை உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

உங்களுக்காக எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் ,சாதி,சமயம்,மதம் கடந்து ,ஊர் ,பெயர் ,நாடு .,கடந்து நண்பர்களாக பழகி வருகின்றோம்,

ஒவ் வொருவருக்கும் பிடித்த நண்பர்கள் பிடிக்காத நண்பர்கள் என இருப்பார்கள்.

அவரவர்களின் சொல் செயல் எண்ணங்கள் பலவாறாக இருக்கலாம்,அதையும் தாண்டி நட்புடன் பழகிக் கொண்டு வருகின்றோம்.

நம்முடைய எண்ணங்களில் உதிக்கும் கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டும் வருகின்றோம். ஏற்பவர்கள் ஏற்காதவர்கள் இருக்கலாம் .இருந்தாலும் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள பேஸ்புக் ஒரு பாலமாக உள்ளது.

இன்றைய பொருளாதார நாகரீக உலகில் பணம் இல்லாமல் பணம் வாங்காமல் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள இலவசமாக செயல்படும் ''பேஸ்புக் நிறுவனத்திற்கு''  நாம் அனைவரும் நன்றியையும்,மகிழ்ச்சியையும் தெரிவிக்க வேண்டும்.தெரிவித்துக் கொள்கிறேன் .

மேலும் நம்முடைய மனதில் உள்ள ரகசிய கருத்துக்கள்,உணர்ச்சிகள், பிடித்த,பிடிக்காத எண்ணங்கள் ,குடும்ப பிரச்சனைகள், மேலும் எதுவாக இருந்தாலும், பிடித்த நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தும்  வருகின்றோம்.

எல்லாமே நேருக்கு நேர் பார்க்காமல்,மறைமுகமாக சாட்டிங் வழியாக ,வெப்காம் வழியாக,எழுத்து வடிவமாக  பகிர்ந்து கொள்வது எவ்வளவு பெரிய சந்தோஷமான செயலாகும்.

உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களிடம் தொடர்பு கொண்டு உரையாடுவதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பேஸ்புக்கில் எனக்கு கிடைத்த தோழர்கள் தோழிகளுக்கு அளவே இல்லை ,அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பிற்கும்,பாசத்திற்கும், மதிப்பிற்கும் அளவே இல்லை. நான் அவர்களுக்கு என்ன கொடுத்தாலும் அந்த அன்பிற்கு  ஈடு இணை ஆகாது.

அவர்களுக்கு நான் கொடுப்பது எல்லாம் அன்பு,தயவு,கருணை,மேலும் என்னுடைய உள்ளத்தில் உதிக்கும் நல்ல கருத்துக்கள் மட்டுமே கொடுக்க முடியும்.மேலும் நல் வாழ்த்துக்களை கொடுக்க முடியும்.

அதற்கு மேலும் நீங்களும் உங்கள் குடும்பமும்,சுற்ற ங்களும்,நண்பர்களும்,  இந்த ஆண்டும் இனி மேல் வருங்காலமும் எந்த குறைகளும் குற்றங்களும் நெருங்காமல்,எல்லா நன்மைகளும்,பெற்று  இல்லங்கள் நிறைந்து  மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் .

மேலும் என்னுடன் தொடர்பு கொண்டு உள்ள ,தொடர்பு இல்லாத அத்துணை பேஸ்புக் நண்பர்களுக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் உள்ளங் கனிந்து அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் எப்போதும் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .உங்களின் நட்புக்காகவும் நலனுக்காகவும்  என்றும் துணையாக இருப்பேன் ....

வேண்டுதல் ;--

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு  எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என் தந்தை நின் அருட் புகழை இயம்பி இட்டால் வேண்டும்

செப்பாத மேனிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செய்னும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896, 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு