திங்கள், 21 டிசம்பர், 2015

தீட்ஷை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சில விஷமிகள் நாட்டில் நிறைந்து உள்ளார்கள்.,

தீட்ஷை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சில விஷமிகள் நாட்டில் நிறைந்து உள்ளார்கள்.,

தீட்ஷை என்ற பெயரில் ,,மலங்களைப் போக்குகின்றோம்,துன்பங்களைப் போக்குகின்றோம், வியாதிகளை குணப்படுத்துகொன்றோம், என்று மக்களை ஏமாற்றும் விஷமிகள் நாட்டில் நிறையப்பேர்  உள்ளார்கள் .

தீட்சை என்றால் மலம் ஒழிப்பு என்பதாகும்.மலங்களை ஒழிக்க மனிதர்கள் எவராலும் முடியாது .கடவுளால் மட்டுமே முடியும்.

மரணத்தை வென்ற வள்ளலார் போன்ற அருளாளர்களால் மட்டுமே முடியும்...இந்த உலகத்தில் வள்ளலார் போன்று இன்றுவரையில் யாரும் பிறக்கவில்லை .யாரும்  வரவில்லை.

பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல குறுக்கு வழியாகும்.

சில சோம்பேறிகள் ஆட்களை வைத்து பேச வைத்து நன்மை செய்வதுபோல் பதிவு செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் .

சீட்டுக் கம்பெனிகள் போல் ஆள் பிடித்துக் கொண்டு உள்ளார்கள்.போன் நெம்பரைக் கொடுத்து தொடர்புகொண்டு வரவழைத்து உங்களின் பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் .

உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

அறியாமையால் மக்கள் ஏமாந்து விடாதீர்கள். அவரவர்கள் செய்த நன்மையையும் தீமையும் அவர்களே தான் நீக்கிக் கொள்ள முடியும்,

தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர்தர வாராது.

உங்களுக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும்,அவற்றைப் போக்க ஒரே வழி .ஜீவ காருண்யம் மட்டுமே .

பசித்த ஏழைகளுக்கு பசியைப் போக்குவதே விரதமாகக் கொண்டு ,உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுடைய பசியைப் போக்குங்கள் .அதுவே நல்ல  மருந்தாக ,அருள் மருந்தாக உங்களின் துன்பங்களைப் போக்கி இன்பம் தரும்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் .

அறிவுள்ள ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே வழிபாடு என்றார் வள்ளலார் .

ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும்,அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் .

ஜீவகாருண்யம் மறையும் போது ;--அன்பும் அறிவும் உடனாக நின்று மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

இது வள்ளலாரின் அருள் வாக்கு .இவற்றை நம்பி செயல்படுங்கள் துன்பம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மூடர்களின் பேச்சை கேட்டு வீணாக அழித்து விடாதீர்கள்.

ஆன்மநேய உடன் பிறப்புகளே உஷார் உஷார் உஷார் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

1 கருத்துகள்:

15 நவம்பர், 2016 அன்று AM 6:20 க்கு, Blogger aruljothi கூறியது…

உண்மை

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு