வியாழன், 24 டிசம்பர், 2015

நடிகர் சின்புவின் விவகாரம் சதி திட்டம் !

நடிகர் சின்புவின் விவகாரம் சதி திட்டம் !

அரசியலின் திட்டமிடப்பட்ட சதியாகும்

மக்களை திசை திருப்பும் வழியாகும்.

மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ,அரசையும் அதிகாரிகளையும் மக்கள் தூற்றி வருகின்றார்கள்

மழை வெள்ளம் பாதிப்பிற்கு அரசுதான் முழுமுதற் காரணம் என்று மக்களும்,மீடியாக்களும் பத்திரிகைகளும் டிவிக்களும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன ,

அவற்றை மாற்று வதற்காக ஆளும் கட்சிக் கார அரசியல் வாதிகள் மக்களை தூண்டிவிட்டு நடிகர் சிம்புவின் விவகாரத்தை பெரிதுபடுத்தி கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள் .

மக்கள் பழையதை மறந்து புதியதை எடுத்துக் கொள்வார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதனால் சிம்புவின் விபகாரம் பெரிதாக்கப் பட்டு உள்ளது.

பாவம் நடிகர் சிம்பு ..அவரின் தந்தை தாய் அவரின் குடும்பமே மிகவும் நொந்து போய் உள்ளார்கள்.மக்களாவது ஆதரவு தரவேண்டும்.

அவர் செய்தது பெரிய தேச துரோகம் அல்ல ..சிறுபிள்ளை விளையாட்டு என அறிந்து பொது மக்கள் மறப்போம் மன்னிப்போம்.மனிதநேயத்தோடு துணையாக இருப்போம்.

கண்டதற்கு எல்லாம் கோஷம் போடும்,சங்கங்கள் ,பொதுநல அமைப்புகள்,மாதர் சங்கங்கள் மேலும் அரசியல் தலைவர்கள் ,  அரசியல்வாதிகள் இப்போது என்ன செய்து கொண்டு உள்ளார்கள்.சிந்திக்க வேண்டும் .

சிம்பு விபகாரம் .
நடிகர் சிம்புவின் பீப்சாங் பாடல் பதிவு பெண்களின் மத்தியில் பெரும் பரபரப்பை என்ற்படுத்தி உள்ளது.அனைவருக்கும் தெரிந்ததே .
ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாக செய்துவிட்டார் .
அவற்றை மேலும் பெரிது படுத்தாமல் மறப்போம் மன்னிப்போம் என்று விட்டுவிடுவது நலம் என்று கருதுகிறேன்.
சிம்புவின் தாயாரும் தந்தையும் தன்னுடைய மகனுக்காக உருக்கமாக பேசுவது ஒவ்வொருவரின் கண்ணீரும் கலங்க வைக்கின்றது.
எனவே மனித நேயத்தோடு சிம்புவின் மேல் சுமத்திய குற்றசாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இதுபோல் தவறுகள் இனி வருங்காலங்களில் எவரும் செய்யாமல் இருக்க இது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும்.
நாட்டில் செய்யக் கூடாத தவறுகள் எல்லாம் செய்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியும் தண்டனைக் கொடுத்தும் பணத்தை வைத்து நீதி மன்றத்தையே விலைக் கொடுத்து வாங்கி வெளியே வந்து தைரியமாக உலாவிக் கொண்டு இருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள்
நாட்டையே அழித்துவிட்டும் கொலைக் குற்றங்கள் பல செய்தும் விட்டும் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களை எல்லாம் மன்னித்து ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள்
சிம்பு செய்தது சிறு பிள்ளை விளையாட்டுத்தனம் போன்றது .அவற்றை மேலும் பெரிதுப் படுத்தாமல் மன்னிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மக்களின் மனித நேயமாகும்.
நம்மமுடைய குழந்தை தவறு செய்து விட்டால் மன்னிப்போம் இல்லையா ..அது போல் சிம்புவை மன்னித்து அவர்மேல் உள்ள குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ஆன்மநேயத்துடன் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
மேலும் காவல்துறையும் ,தமிழக அரசும் நீதி மன்றமும் சிம்புவுக்கு கருணை புரிய வேண்டும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு