சனி, 2 ஜனவரி, 2016

ஆலயங்களில் ஆடை கட்டுப்பாடு அவசியம் !

ஆலயங்களில் ஆடை கட்டுப்பாடு அவசியம் !

ஆலயங்களில் வைத்துள்ள உணர்ச்சி அற்ற பொய்யான மொம்மை தெய்வங்களுக்கு உங்கள் ஆடைகளை கவனிக்கும் வேலையைத்தான் கொடுத்து உள்ளீர்களா ?

ஆலயங்களில் உண்மையான கடவுள்கள் இல்லை அங்கு சென்று வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை.

அவை தத்துவங்கள் என்பதாகும் .தத்துவங்கள் என்பது உணர்ச்சி அற்ற ஜடப் பொருள்கள் .என்பதாகும் .

பொய்யர்கள் செய்த சூழ்ச்சியே ஆலய வழிப்பாட்டு முறைகளாகும்.அவற்றை மனிதர்கள் மதி மயங்கி பின்பற்றி அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மனிதர்களுக்கு எப்போதுதான் விழிப்பு உணர்வு உண்டாகி திருந்துவார்கள் என்பது தெரியவில்லை.

உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் மக்களுக்கு உண்மையான அறிவையும் ஆற்றலையும் கொடுத்து விழித்து எழ செய்யவேண்டும்.

ஆடைகள் !

ஆடை இல்லாத காட்டு மிராண்டிகளாய வாழ்ந்த மனிதனுக்கு ஆடைகள் ஏன்? எதற்க்காக அணிவிக்கப் பட்டது என்பதை மக்களுக்குப் போதிக்கத் தெரியாமல் ஆலயங்களுக்கு செல்லும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் இயற்றி உள்ளார்கள் மதிகெட்ட மனிதர்கள்.

மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிர் இனங்களும் ஆடைகள் அணிவதில்லை .

மனிதர்களுக்கு மட்டும் ஆடைகள் அணிய அவசியம் வந்தது  ஏன்? வந்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மனிதர்கள் அணியும் ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை என்பது எதற்கு ?;--,

மனிதனுக்கு மட்டுமே உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்துள்ளான்.

உயர்ந்த அறிவு ஏன் கொடுக்கப்பட்டது ?

மனிதனின் ஆன்மாவில் அருள் என்ற பொக்கிஷம் உள்ளது அதைத் தெரிந்து அவற்றை சுரக்க வைத்து அதை அனுபவித்து மரணத்தை வென்று இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக மனிதப் பிறப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது .

அருளைப் பெறுவதற்கு ''விந்து நாதம்'' என்பது மிகவும் முக்கியமானது .அவற்றைப் பாது காக்க வேண்டும்.அவற்றை பாது காக்க மறைப்பதற்காக  ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடைகள் அவசியம் என்பதை மக்களுக்குப் போதிக்க வேண்டும்.

உணர்ச்சிதான் விந்துவாக உள்ளது.உணர்ச்சித் தரும் உறுப்புக்களை மறைப்பதற்காகவும், உணர்ச்சிகளை கட்டுப் படுத்தவும், உயிர்சக்தியானது வெளியே விரையமாகாமல் பாது காக்கவும் ஆடைகள் தேவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அந்த ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆபாச உறுப்புக்கள் என்பது தவறானது;-- .உயிரைப் பாது காக்கும் பிராண சக்தியானது பெண்கள் உடம்பில் நான்கு இடத்தில் உள்ளது ,ஆண்கள் உடம்பில் முன்று இடத்தில் உள்ளது .

பெண்கள் உடம்பில் உள்ளது .வாய் .கன்னம் ,மார்பு .சுரோணிதம் என்னும் கீழ் உறுப்பு .

ஆண்கள் உடம்பில் உள்ளது  வாய் ,கன்னம்,உபஸ்தத் தடி என்னும் கீழ் உறுப்பு .

உயிர் சக்தியானது  திரவமாக மாற்றப்பட்டு குழந்தை வேண்டும் போது ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டு பெண் உறுப்பில் விந்துவை சேமிக்க வேண்டும் அப்போதுதான்  கரு உண்டாகி குழந்தை பிறக்கும்

தேவை இல்லாமல் விந்துவை வெளியேற்றக் கூடாது அதிகமாக வெளியே விட்டால் சீக்கிரம் மரணம் வந்து விடும்.

விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி உண்மையாகும்.

கணவன் மனைவி பதினைந்து நாளைக்கு ஒருமுறை உறவு கொள்ளலாம், மற்றபடி வேறு எந்த ஆபாச வகையிலும் எந்த காலங்களிலும் ஆணும் பெண்ணும் சுக்கில சுரோணிதம் என்னும் விந்துவை வெளியே செலவு செய்யக் கூடாது .

ஆடு மாடுகள் போன்ற மிருகங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறைதான் உடல் உறவு கொள்ளும் .

ஆனால் உயர்ந்த அறிவுள்ள ஆணும் பெண்ணும் உணர்ச்சியைக் கட்டுபடுத்த தெரியாமல் முடியாமல் காமம் என்னும் விந்துவை கண்டபடி செலவு செய்து அழிந்து போகின்றார்கள்

விந்து வெளியே விரையமாக விரையமாக வயது முதிர்ந்து உயிர் சக்தி இழந்து இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

உயிர் சக்தியானது விரையமாகும் போது துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் வந்து கொண்டே இருக்கும்

எனவேதான் உணர்ச்சிகளைப் மறைப்பதற்கும் அவற்றைக் கட்டுபடுத்திக் கொள்ளவும் ஆடைகள் அணிய வேண்டும் என்பது அவசியமாகும் .

கவசிச்சியைக் காட்டி உணர்ச்சியைத் துண்டும் ஆடைகள் அணிவது அபாயகரமானது என்பதை ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் ஆடை இல்லாமல் இருந்தால் அதற்கு ஆபாசம் என்றும் அபாயம் என்றும் பெயர் வைத்து உள்ளார்கள் .

ஆலயங்களுக்கு போகும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுபாடும் என்றும் மற்ற காலங்களில் கட்டுபாடுகள் தேவை இல்லை என்பதும் சரியான சட்டம் இல்லை .

மனத்தைக் கட்டுபடுத்த வேண்டும் !

உடம்பை மறைக்க புறத்தே ஆடைகள் அணிகின்றோம் .மனத்தை கட்டுபடுத்த எந்த ஆடைகளை அணிவீர்கள் .

உடம்பையும் உயிரையும் விந்துவையும் கட்டுபடுத்த ஒழுக்கம் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஒழுக்கம் என்றால் என்னவென்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

வள்ளல்பெருமான் வந்துதான் ஒழுக்கம் என்றால்  என்ன? என்பதற்கு சரியான விளக்கம் தந்து உள்ளார்கள்.

அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும் .உயிரைக் காப்பாற்றுவதே ஒழுக்கம் என்பதாகும் .வள்ளல்பெருமான் எழுதி வைத்துள்ள ஜீவ காருண்யம் என்ற அருள் நூலைப்  பெற்று படித்துப் பாருங்கள் எல்லா உண்மைகளும் தெளிவாக இருக்கும்.

மனிதன் உண்ணும் உணவு ,அவன் அணியும் உடை,,வாழும் வாழ்க்கை ...கடவுள் யார் ? என்ற உண்மை .கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் உறவு முறைகள் .கடவுளைத்  தெரிந்து கொள்ளும் வழி முறைகள் மரணத்தை வென்று கடவுள் மயமாகும் அருள் ஆற்றல், அனைத்தும் ஒருங்கே ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற அருள் நூலில் உள்ளன .

ஆடைகளை கட்டுபடுத்துவதுடன் மனத்தைக் கட்டுபடுத்த தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையில் வளம் பெறுவீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 8:13 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு