செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஒரே ஒருவழி உள்ளது.!

தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஒரே ஒருவழி உள்ளது.!

தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களை ஆட்சி செய்யும்,மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர்கள்,ஒன்று சேர்ந்தும்,

மற்றும் வருங்கால I A S ...I P S ,படித்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ,வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்தால் தமிழ் மக்களை காப்பாற்றலாம்.

ஏன் என்றால் அவர்களுக்குத்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.காப்பாற்றும் வழி தெரியும் அதற்காகவே படித்தவர்கள்.

அரசியவாதிகளின் பேச்சைக் கேட்டு ஆட்சி செய்பவர்கள் அவர்கள்தான் .அவர்களே அட்சி பீடத்தில் அமர்ந்தால் தடை இல்லாமல் சுதந்தரமாக மக்கள் பணி ஆற்ற முடியும்.

அரசியவாதிகளை ஓரம் கட்டி,..அவர்கள்  துணிந்து அரசியலுக்கு வந்தால் மக்கள் நிச்சயமாக ஓட்டுப் போட்டு தேர்வு செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இப்போது உள்ள நேரம் காலம்,அதற்கு ஒத்ததாக இருக்கின்றது.மக்களும் எதிர் பார்க்கின்றார்கள்.

எந்த அரசியல்வாதிகளையும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை .

இதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தால் உலகமே ஆச்சரியப்படும்.மேலும் உலகமே அவற்றை பின்பற்றும்.

இதற்கு மாவட்ட ஆட்சியாளர்களும் .காவல் துறை கண்காணிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

நாட்டின் நலன் கருதி,மக்களின் நலன் கருதி முடிவு எடுங்கள் .வெற்றி நிச்சயம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

1 கருத்துகள்:

15 நவம்பர், 2016 அன்று AM 6:22 க்கு, Blogger aruljothi கூறியது…

அருமையான, உண்மையான, ஊர்ஜிதமான கருத்துக்கள்

வாழ்த்துக்கள் ஐயா.

அன்புடன்
அருள்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு