செவ்வாய், 5 ஜனவரி, 2016

என் மகன் நந்தக்குமார் பதவி உயர்வு !

என் மகன் நந்தக்குமார் பதவி உயர்வு !

என்னுடைய இளைய மகன் நந்தக்குமார் என்பவர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையில் மிகவும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

அவர் முதன் முதலில் மாதம் இரண்டாயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார் ..அவருடைய உழைப்பு,நேர்மை,சத்தியம் தவறாமல் பாடுபட்டார் .

அவர் ''KEMIN INDUSTRLES SOUTH ASIA LTD THE TRAPEZIUM.''.கம்பெனியில் ,BUSINESS MANAGER ..பதவியில் பணி புரிந்தார் .இப்போது அவருக்கு GM.அதாவது GENRAL MANEGER பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்த கம்பெனி உலகின் ஏழாவது இடத்தில் உள்ளது.

இன்று இலட்சக்கணக்காக சம்பளம் பெறுகின்றார் .

அவர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை ஜீவ காருண்ய பணிக்கு  ஒதுக்கி விடுவார் .

ஜீவ காருண்யம் அவருடைய உடம்பின் ரத்தத்தில் ஊறி போனது .அவருக்கு நான் எதையும் சொல்லித் தரவில்லை .அவரை மேலே ஏற்றி விட்டது வள்ளலார் சொல்லிய அன்பு,தயவு,கருணை என்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

வள்ளலார் கொள்கையைப் முழுமையாக பின்பற்றி வாழ்பவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்தக்குறையும் வைக்க மாட்டார் என்பது என்னுடைய மகனின் வாழ்க்கையே முழுமையான உதாரணம்  சான்று.

என்னையும் என் மனைவியையும் எந்த குறையும் வைக்காமல் மகிழ்ச்சியாக பாது காத்து வருகின்றார் .

அவர் என்னுடைய மகனாக பிறந்ததற்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் .

நான் இடைவிடாது வணங்கி வாழ்த்திக் கொண்டுவரும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மேலும் தலை வணங்குகிக் கொண்டே இருப்பேன்.

என்னுடைய அன்பு மகன் நந்தகுமாருக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருந்து ஆசீர் வாதிக்க வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன் .

இதை நான் பெருமைக்காக எழுதவில்லை ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ளும் சன்மார்க்கிகளுக்கு எந்த குறையும் இல்லாமல் அருள் என்னும் கருவியால்  பாதுகாக்கப் படுவார்கள்.இது சத்தியம்.

உங்களுடைய வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன் வணங்கி மகிழுங்கள் .நீங்கள்தான் உயிருள்ள கடவுள்கள் நீங்கள் வாழ்த்துவதுதான் சிறந்த சான்று ...

ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய் .

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ்  சொல் ...திருவள்ளுவர்

உங்களின் அன்புடைய  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 8:04 க்கு, Blogger Unknown கூறியது…

வாழ்க வளமுடன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு