வியாழன், 21 ஜனவரி, 2016

அருட்பெருஞ்ஜோதி கடவுள் யார் !

அருட்பெருஞ்ஜோதி கடவுள்  யார் !


உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளல்பெருமான் ஆவார் .

அவர் அறிமுகப் படுத்திய கடவுளின் உண்மையான மகா மந்திரம் தான் ''அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி ''என்பதாகும்.

இந்த மந்திரத்திற்கு உள் எல்லா மந்திரங்களும் அடங்கி விடுகின்றன .எனவேதான் இதற்கு ''மகா மந்திரம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த மந்திரம் தத்துவங்களை எல்லாம் கடந்து தத்துவா  தீதத்தில் உள்ளது .எங்குமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு வந்தாலே துன்பம் தொலைந்து இன்பம் பெருகும்.

மரணத்தை வென்றவர்கள் மட்டுமே உண்மைக் கடவுளான ''அருட்பெருஞ்ஜோதி'' கடவுளைக் காண முடியும்...

தங்களுடைய உடம்பில் உள்ள ஆன்மாவை பார்க்கத் தெரிந்தவர்கள் அருட்பெருஞ்ஜோதியைப் பார்க்கலாம்..

அருட்பெருஞ்ஜோதியைத் வெளியில் தேட வேண்டாம் ,நம்முடைய சிரனடுவில் உள் ஒளியாக இருப்பவரே அருட்பெருஞ்ஜோதியாகும்.

அதன் அடையாளமாக புறத்தில் வைத்துள்ளது தான் வடலூரில் உள்ள ''சத்திய ஞான சபையாகும் '' அதன் உள்ளே சுடர்விட்டு எறிவதுதான் ''அருட்பெருஞ்ஜோதியின் ''விளக்கமாகும்..அதைத்தான் ''ஜோதி தரிசனம்'' என்று சொல்லப் படுகின்றது.


ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு