ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பக்தி என்பது என்ன ?

பக்தி என்பது என்ன ?


கோவில்களில் பொய்யான உருவங்களை வைத்து ,மெய்யான உருவங்களை அடிமையாக்குவதே பக்தி என்பதாகும் .

அப்பாவி மனிதர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கும் கூட்டம் செய்த சூழ்ச்சிதான் பக்தி என்பதாகும்.

பக்திக்கும் ஆன்மாவிற்கும் சம்மந்தமே இல்லை .

வறுமையில் வாடும் உயிர் உள்ள ஜீவன்களுக்கு உதவி செய்வதே கடவுள் வழிபாடு ,என்பதாகும்.

எனவே தான் வள்ளல்பெருமான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.

உயிர் உள்ள ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றுவதே வழிபாடாகும் ....

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

ஆலயங்களில் கொட்டும் பணத்தை ஏழைகளின் வயிற்றில் கொட்டுங்கள் ..உங்களின் துன்பங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும் .

உங்களின் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டுமானால் ,மற்ற உயிர்களைக்  காப்பாற்ற வேண்டும்..

துன்பத்தை துடைக்கும் ஒரே மருந்து  ஜீவ காருண்யம் என்னும் கருணை மருந்து  மட்டுமே....

 ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 7:56 க்கு, Blogger Unknown கூறியது…

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு